3/29/2015

இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்


36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக இடம் பெற்றுள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகவே இடம் பெற்றுள்ளது.இன்று யாஸீன் அத்தியாயம் தொடர்பாக வந்துள்ள இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளை அடிப்படையாக வைத்துதான் பல அமல்களை செய்துவருகின்றனர். எனவே யாஸீன் தொடர்பாக வந்துள்ள செய்திகளின் தரத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.  யாஸீன் அத்தியாயத்தை ஒருவர் இறந்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகின்றனர்.
இவ்வாறு செய்வதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.
(1)
  عن سليمان التيمي ، عن أبي عثمان – وليس بالنهدي – ، عن أبيه ، عن معقل بن يسار ، قال : قال رسول الله – صلى الله عليه وسلم – :
" اقرؤوا ( يس ) على موتاكم " .
أخرجه أحمد ( 5 / 26 و 27 ) ، والبخاري في " التاريخ الكبير " ( 8 / 57 ) ، وأبوداود ( 3 / 188 / 3121 ) ، وأبوعبيد في " فضائل القرآن " ( ص 136 ) ، وابن أبي شيبة ( 3 / 237 ) ، وابن ماجه ( 1 / 465 – 466 / 1448 ) ، والحاكم ( 1 / 565 ) ، والبيهقي ( 3 / 383 ) .
உங்களில் இறந்தவர் மீது யாஸீன் ஒதுங்கள்” என்று நபிகள்(ஸல்) கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.அறிவிப்பவர்:மஃகில் பின் யஸார்(ரலி) நூல்கள்: அபூ தாவூத் 2714,இப்னு மாஜா 1438,அஹ்மத் 19416,19427,ஹாகிம் 1/753
மேற்கண்ட ஹதீஸ்களில் அபு உஸ்மான் என்பவர் தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார் அபு உஸ்மானும் அவர் தந்தையும் யார் என அறியப்படதவர்கள் என்று ஹதீஸ் துறை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்

قال الدارقطني : " هذا حديث ضعيف الإسناد ، مجهول المتن ، لا يصح في الباب حديث " .
இந்த தலைப்பில் வரும் எந்த ஹதீசும் ஸஹிஹ் அல்ல  என்று தார குத்னி  இமாம் கூறுகிறார் 
மேலும் ஹதீஸில் வரும் வார்த்தை அறியப்படாத தாக உள்ளது 
وأعله ابن القطان بالاضطراب والوقف ، وبجهالة حال أبي عثمان   
( تلخيص الحبير 2 / 104 ) . 
இமாம் இப்னு கத்தான்  அவர்கள் கூறும்போது : - இந்த ஹதீஸ் ஒன்றுக்கொன்று முரணாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அறிவிப்பாளர் அபு உத்மான்  என்பவர் யாரென்று அறியப்படாதவர்  ( இமாம் இப்னு ஹஜர் :தல்ஹீசுள் ஹபீர் 104/2 )
-------------------------------------------------------------------------------------------------------------------------
وقال النووي في " الأذكار " ( ص 117 ) : 
" إسناده ضعيف ؛ فيه مجهولان ، لكن لم يضعفه أبوداود " .
இமாம் ஷாபி அவர்களுடைய மாணவன்  இமாம் நவவி அவர்கள் தன்னுடைய  'அத்கார் 'எனும் நூலில் குறிப்பிடும்போது :- இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது  கரணம்  இதில் இரண்டு  அறிவிப்பாளர்கள் யாரென்று அறியப்படாதவர்கள்,  என்றாலும் இமாம்  அபு தாவூத் அவர்கள் இந்த ஹதீஸை பலவீனம் என்று சொல்லவில்லை என்ற தவறை நவவி இமாம் சுட்டிக்காட்டியுள்ளார்  
---------------------------------------------------------------------------------------------------------------------
وقال المنذري : 
" وأبوعثمان وأبوه ليسا بالمشهورين " . 
இமாம் முன்திரீ அவர்கள் கூறும்போது :- அபு உத்மான் என்பவரும் அவருடைய தந்தையும் பிரபல்யம் இல்லாதவர்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------------
وقال ابن حجر في " نتائج الأفكار " : 
" هذا حديث غريب " . 
( الفتوحات الربانية 4 / 118 ) . 
------------------------------------------------------------------------------------------------------------------------
وقال الألباني في " الإرواء " ( 3 / 150 ) : 
" ضعيف " . 
அல்பானி இமாம் ''இர்வா ''  எனும் நூலில் :- பலாவீனமானது என்று குறிப்பிடுகிறார்
-----------------------------------------------------------------------------------------------------------------------
وقال في " كتاب الجنائز " ( ص 11 ) : 
" لم يصح فيه حديث " . 
 அல்பானி இமாம் அவர்கள் 'ஜனாஇஸ்'  எனும் நூலில் :- ஸஹிஹ்  இல்லை  என்று கூறியுள்ளார் 
________________________________
وقال ابن عثيمين في " الشرح الممتع " ( 5 / 318 – 319 ) : 
" هذا الحديث مختلف فيه ، وفيه مقال " . 
قلت : فلهذا الحديث ثلاث علل : 
1- الاضطراب . 
2- جهالة أبي عثمان . 
وأيضاً فقد قال ابن المديني 3 : 
" لم يروي عنه غير سليمان التيمي ، وهو مجهول " ( تهذيب التهذيب 6 / 407 ) . 
وقال الذهبي في " الميزان " ( 4 / 550 ) :
" لا يعرف أبوه ، ولا هو ، ولا روى عنه سوى سليمان التيمي " . 

இப்னு உதைமீன்  அவர்கள் ஷராகுல் முமதாஹ்  எனும் நூலில் :- இந்த ஹதீஸ் ஒன்றுக்கொன்று முரணாக அறிவிக்கப்பட்டுள்ளது  , மேலும் இதில் 3 விமர்சனங்கள் உள்ளன   
1: முரண்பாடு 
2: அபு உத்மான் அறியப்படாதவர் 
3:இப்னு மதீனி சொல்கிறார் :இந்த அபு உத்மாநிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் சுலைமான் அத்தைமி என்பவர் அறியப்படாதவர் 
   
وقال الذهبي في " الميزان " ( 4 / 550 ) :
" لا يعرف أبوه ، ولا هو ، ولا روى عنه سوى سليمان التيمي "
மேலும் தகபி இமாம் தன்னுடைய ''மீதான்''எனும் நூலில் :- அபு உத்மானும்  அவர் தந்தையும் அறியப்படாதவர் , இந்த அபு உத்மானிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் சுலைமான் அத்தைமி அவரும் அறியப்படாதவரே,
قلت : فقول ابن حجر في " التقريب " ( 2 / 434 ) : " مقبول " ليس بمقبول
மேலும்   இப்னு ஹஜர் கூறும்போது  இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாது  
-------------------------------------------------------------------------------------------------------------------------
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் எந்த ஹதீஸாக இருந்தாலும்   அதை அறிவிப்பவருக்கு வரலாறு இருக்க வேண்டும். அவரது நினைவாற்றல், நாணயம் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இருவரும் யார் என்றே தெரியாததால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அபூ உஸ்மான் என்பவர் தனது தனது தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் மஃகில் பின் யஸார் வழியாக நேரடியாக அறிவிக்கும் சில ஹதீஸ்கள் உள்ளன. பைஹகி, இப்னு ஹிப்பான் மற்றும் சில நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ உஸ்மான் என்பவர் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் மஃகில் பின் யஸார் வழியாக ஒரு மனிதர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு மனிதர் என்றால் யார்? அவரது நம்பகத் தன்மை எத்தகையது என்பதை யாரும் அறிய முடியாது. எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
இவை அனைத்துமே பலவீனமாக உள்ளதால் இறந்தவர்களுக்கு அருகில் அல்லது இறந்தவரின் நன்மைக்காக யாஸீன் ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.
உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்! என்று இவர்கள் செய்த பொருளும் தவறானது என்று இந்த செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள்.

قال أبو حاتم رضي الله عنه : قوله : ( اقرؤوا على موتاكم يس ) : أراد به من حضرته المنية لا أن الميت يقرأ عليه - صحيح ابن حبان 7 /269 

اقرؤوا على موتاكم يس இந்த வாசகத்தின் மூலம் நாடப்படுவது இறக்கும் நிலையில் உள்ளவரைத்தான். (ஏனெனில்) இறந்தவருக்கு (எதுவும்) ஓதப்படாது.
நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான், பாகம் :7, பக்கம் : 269

இந்த செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அபூஉஸ்மான் என்பவரும் அவருடைய தந்தையும் யாரென அறியப்படாதவர்கள். இவரின் நம்பத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை. என்று  இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------
734 - حديث روي أنه صلى الله عليه و سلم قال اقرءوا يس على موتاكم أحمد وأبو داود والنسائي وابن ماجة وابن حبان 

இந்த செய்தியை இப்னுல் கத்தான் அவர்கள் இது குளறுபடியானவை என்றும் நபித்தோழரின் கூற்றாகவும் இடம்பெற்றுள்ளது என்றும் அபூஉஸ்மான் என்பவரும் அவருடைய தந்தையும் யாரென அறியப்படாதவர் என்று குறைகூறியுள்ளார்கள். 
-----------------------------------------------------------------------------------------------------------------------
والحاكم ... وأعله بن القطان بالاضطراب وبالوقف وبجهالة حال أبي عثمان وأبيه ونقل أبو بكر بن العربي عن الدارقطني أنه قال هذا حديث ضعيف الإسناد مجهول المتن ولا يصح في الباب حديث- تلخيص الحبير - ابن حجر 2 /104 மேலும் இந்த செய்தி அறிவிப்பாளர் பலவீனமானவர் செய்தி விளங்காதவை. இந்த கருத்தில் ஆதாரப்பூர்வமான ஒரு நபிமொழியும் இல்லை என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். நூல் : தல்கீஸுல் ஹபீர், பாகம் :2, பக்கம் : 104
********************************************************************************************************
(2)

'மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாஸீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக   ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை அறிவிக்கும் ஸாலிம் பின் மர்வான் என்பவர் பலவீனமானவர்.
     
" ما من ميت يموت ، فيقرأ عنده ( يس ) ؛ إلا هون الله عليه " .
أخرجه أبونعيم في " أخبار أصبهان " ( 1 / 188 ) من طريق مروان بن سالم ، عن صفوان بن عمرو ، عن شريح ، عن أبي الدرداء ، به . 

وإسناده ضعيف جداً ؛ مروان بن سالم متروك كما قال ابن حجر في " التقريب " ( 2 / 170 ) .
قد اضطرب فيه فرواه مرة أخرى عن صفوان به ، إلا أنه قال : " عن أبي الدرداء وأبي ذر " .
أخرجه الديلمي ، كم ا في " تلخيص الحبير " ( 2 / 104 ) .
''அபு நஈம் ''  அவர்கள் அஹ்பார் அஸ்பஹான்   எனும் நூலில் :- மர்வான் இப்னு சாலிம் என்பவர் சப்வான் பின் அம்ரு ஊடாக சப்வான் பின் அம்ரு சரீஹ்  ஊடாக சரீஹ் என்பவர்  அபு தர்தா எனும் சஹாபி இடமிருந்து அறிவிக்கிறார்   ''மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாஸீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும்''

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரும் மர்வான் இப்னு சாலிம் என்பவர் பலவீனமானவர் 
 இதனை இப்னு ஹஜர் அவர்கள் ''தக்ரீப்'' எனும் நூலில் கூறியுள்ளார் .
وخالفه أبوالمغيرة فرواه : 
عن صفوان ، قال : حدثتني المشيخة : أنهم حضروا غضيف بن الحارث الثمالي حين اشتد سوقه ، فقال :
هل منكم من أد يقرأ ( يس ) ؟
இந்த அறிவிப்பிற்கு மாற்றமாக சப்வான் என்பவரிடமிருந்து  அபுல் முகீரா அறிவிக்கிறார் ,
'மஷீகா' எனக்குச் சொன்னார் :கலீப் பின் ஹாரித் என்பவருக்கு மரண கஷ்டம் ஏற்பட்ட போது கேட்டார் :உங்களில் யாராவது யாசின் ஓத  விரும்புகிறீர்களா ? 
قال :
فقرأها صالح بن شريح السكوني ، فلمل بلغ أربعين فيها فيض .
சைகா சொன்னார் :மரணத்தருவாயில் இருப்பவருக்கு யாசின் ஓதப்ப்படுமானால் அவருடைய கஷ்டம் இலேசாக்கப்படும் . 
قال :
فكان الشيخة يقولون :
" إذا قرئت عند الميت ؛ خفف عنه " .
قال صفوان :
وقرأها عيسى بن المعتمر عند ابن معبد .
قال ابن حجر في " الإصابة " ( 5 / 190 ) : 
" حديث حسن الإسناد " .
சப்வான் சொன்னார் :  ஈசா பின் மூதமிர் யாசின்  சூராவை பின்   'மாபதுக்கு' ஓதினார் .
இதை 'இப்னு ஹஜர் ' தன்னுடைய  ' இஸாபா '  எனும் நூலில் கூறியுள்ளார் .மேலும் 'இப்னு ஹஜர்' அவர்கள் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசை   'சரியானது' என்று கூறியுள்ளார் .
மேலே உள்ள சம்பவத்தை பற்றி இமாம் அல்பானி  கூறும்போது..... 
وقال الألباني في " الإرواء " ( 3 / 152 ) : 
" هذا الإسناد صحيح إلى غضيف بن الحارث – رضي الله عنه – ؛ ورجاله ثقات غير المشيخة ، لكن جهالتهم تنجبر بكثرتهم ، لاسيما وهم من التابعين " 
قلت : لو قلنا بأن مثل هذه الجهالة تنجبر بالجمع لحسّنا إسناده ، وأما تصحيحه فبعيد !! ولكن الذي يظهر لي أن جهالتهم لا تنجبر بكثرتهم ، وأيضاً فقد يكون ناقل كلامهم هو صالح بن شريح ، وهو مجهول كما قال أبوزرعة الرازي ( الجرح والتعديل 4 / 405 )
وأخرج ابن عدي في " الكامل " ( 5 / 1801 ) من طريق عمرو بن زياد ، حدنا يحيى بن سليم الطائفي ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة – رضي الله عنها – قالت : سمعت رسول الله – صلى الله عليه وسلم – يقول : " من زار قبر والديه أو أحدهما يوم الجمعة ، فقرأ ( يس ) ؛ غفر له '  

قال ابن عدي :
" هذا الحديث بهذا الإسناد باطل ، ليس له أصل " .

قلت : عمرو بن زياد قال الدارقطني : 
" يضع الحديث "
 .*******************************************************************************************
(3) 

من قرأ ( يس ) ابتغاء وجه الله ، غفر الله له ما تقدم من ذنبه ، فاقرؤوها عند موتاكم

(البيهقى فى شعب الإيمان عن معقل بن يسار)
أخرجه البيهقى فى شعب الإيمان (2/479 ، رقم 2458) .
---------------------------------
ضعيف) .الجامع الصغير/ 5785 )
யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் மரணத்தருவாயில் உள்ளவர்களிடம் ஓதுங்கள்

இமாம் சுயூத்தி அவர்கள் ஜாமிஉல் ஸகிர் எனும் நூலில் இந்த ஹதீஸை பதிவு செய்யும் போது (லஈப்) பலவீனமான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார்

பைஹகி இமாம் அவர்கள் ஷுஅபுல் ஈமான் எனும் நூலில் வரும் அறிவிப்பாளர் வரிசையில் மஃகில் பின் யஸார் என்பவருக்கும் சுலைமான் பின் தர்ஹான் என்பவருக்கும் இடையில் ஒருவர் யாரென்று அறியப்படாதவர் இடம்பெற்றுள்ளார் இதன் காரணமாக இந்த ஹதீஸ் மிக பலவீனம் உடையதாகும்
அறிவிப்பாளர் வரிசையை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்  
(1) معقل بن يسار 
| (2) اسم مبهم 
| | (3) سليمان بن طرخان 
| | | (4) معتمر بن سليمان 
| | | | (5) عاصم بن النضر 
| | | | | (6) إبراهيم بن عبد الله 
| | | | | | (7) أحمد بن عبيد 
| | | | | | | (8) علي بن أحمد 
| | | | | | | | (9) أحمد بن الحسين 
| | | | | | | | | (10) الكتاب: شعب الإيمان للبيهقي [الحكم: إسناد شديد الضعف فيه راو مجهول] 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாஸீன் என்பது 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயம். மற்ற அத்தியாயங்களை நமது நன்மைக்காக நாம் ஓதுவது போல யாஸீனையும் நமது நன்மைக்காக ஓதலாம். இறந்தவரின் நன்மைக்காக இதை ஓதக் கூடாது.
.*********************************************************************************
(4)
  
திருக்குர் ஆனின் இதயம்


قال أبو عيس الترمذي:
حدثنا قتيبة وسفيان بن وكيع, حدثنا حميد بن عبد الرحمن الرواسي عن الحسن بن صالح عن هارون أبي محمد عن مقاتل بن حيان عن قتادة عن أنسرضي الله عنه قال:
قال رسول الله صل الله عليه وسلم: 
«إن لكل شيء قلباً, وقلب القرآن يس, ومن قرأ يس كتب الله له بقراءتها قراءة القرآن عشر مرات» ثم قال:
هذا حديث غريب لانعرفه إلا من حديث حميد بن عبد الرحمن, وهارون أبو محمد شيخ مجهول

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியததற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை பதிவு செய்கிறான்.நூல்கள் : திர்மிதீ (2812), தாரமி (3282)

இதன் ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹாரூன் அபீ முஹம்மத் என்பவர் இடம் பெறுகிறார், இவர் யாரென்று அறியப்படாதவர். இக்கருத்தை இதை பதிவுசெய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்த செய்தியின் இறுதியில் இக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் தாரமியில் இடம் பெறும் ஹதிஸில், யார் என அறியப்படாத ஹாருன் அபீ முஹம்மத் என்பவரே இடம் பெறுவதால் இதுவும் பலவீனமாதாகும்
*******************************************************************************************************************
(5)

திருக்குர்ஆனின் மிக உயர்ந்த அத்தியாயம்

وقد قال الإمام أحمد: 
حدثنا عارم حدثنا معتمر عن أبيه عن رجل عن أبيه عن معقل بن يسار رضي الله عنه. 
قال: إن رسول الله صل الله عليه وسلم قال: 
«البقرة سنام القرآن وذروته, نزل مع كل آية منها ثمانون ملكاً, واستخرجت{ الله لا إله إلا هو الحي القيوم} من تحت العرش فوصلت بها ـ أو فوصلت بسورة البقرة ـ ويس قلب القرآن لا يقرؤها رجل يريد الله والدار الاَخرة إلا غفرله, واقرؤوها على موتاكم»
ثم قال الإمام أحمد:
حدثنا عارم, حدثنا ابن المبارك, حدثنا سليمان التيمي عن أبي عثمان وليس بالنهدي
சூரா பகரா குர்ஆனுடைய திமிழாகும். மேலும் அதில் உயர்வானதுமாகும். சூரத்துல் பகராவின் ஒவ்வொரு ஆயத்துடன் எண்பது மலக்குகள் இறங்கிறார்கள். இன்னும் ”அல்லாஹு லாயிலாஹு இல்லாஹுவ அல் ஹய்யுல் கையூம்” என்ற வசனம், அர்ஷின் கீழ் இருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் இனைக்கப்பட்டுள்ளது. யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும், யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் மறுமையும் நாடி அதை ஓதுகிறரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் (எனவே) அதை உங்களில் மரணநெருக்கத்தில் உள்ளவர்களுக்கு ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்கள் : அஹ்மத் (19415), முஸ்னத் ரூயானி பாகம் : 2 பக்கம் : 323, அல்முஃஜமுல் அல்கபீர்லிதப்ரானீ பாகம்:20,

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஒரு மனிதர் அறிவிக்கிறார் என்றும் அவர் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார் என்றும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு மனிதர் யார்? அவரின் தந்தை யார்? அவரின் நம்பகத்தன்மை எத்தகையது? என்ற கேள்விகள் எழும். இது போன்ற முகவரி இல்லாதவர்களின் செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை.இதே செய்தி அஹ்தில் (19427), அபூதாவூத் (2714), இப்னு மாஜா (1438), பைஹகி பாகம் : 3 பக்கம் 383,இப்னு ஹிப்பான் பாகம் : 7, பக்கம் : 269 லும் இடம் பெற்றுள்ளது.இவற்றில் ஒருமனிதர் என்ற இடத்தில் அபூஉஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவரே! இவரின் நம்பகத் தன்மையும் உறுதிசெய்யபடாததால் இச்செய்தியும் பலவீனமடைகிறது.

இந்த செய்தி தொடார்பாக ஹாபிழ் இப்னு ஹஜர் பின்வருமாறு கூறுகிறார்கள் : இந்த செய்தி நபித்தோழர் கூற்றாகவும், நபிகளாரின் கூற்றாகவும் குழப்பி அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அபூஉஸ்மான் என்பரின் நிலையும் அவரின் தந்தையும் நிலையும் அறியப்படவில்லை என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறைகூறியுள்ளார்கள். ‘இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகவும் அதில் குறிப்பிட்டுள்ள செய்தி அறியமுடியாததாகும் உள்ளது. மேலும் இது தொடர்பாக எந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!’ என்று தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : தல்கீஸுல் ஹபீர் பாகம் : 2, பக்கம் : 104)

*******************************************************************************
பத்து குர்ஆனை ஓதிய நன்மை
(6)

  ''  من قرأ يس مرة فكأنما قرأ القرآن عشر مرات ''
أخرجه البيهقى فى شعب الإيمان (2/481 ، رقم 2466)  “ (البيهقى فى شعب الإيمان عن حسان بن عطية مرسلاً)
أخرجه البيهقى فى شعب الإيمان (2/479 ، رقم 2459) وقال : هذا مرسل ..
(البيهقى فى شعب الإيمان عن أبى هريرة)
أخرجه البيهقى فى شعب الإيمان (2/481 ، رقم 2466)  : 
யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகிறாரோ அவர் பத்து தடவை குர்ஆனை ஓதியவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் ஷுஅபுல் ஈமான் பாகம் : 2, பக்கம் : 479)

இதை பதிவு செய்த ஆசிரியர் அவர்களே இதை முர்ஸல் வகையை சார்ந்தது என்று கூறியிருக்கிறார். அதாவது நபித்தோழர் அல்லாத ஒருவர் நபிகளார் கூறியதாக சொல்வது. இது ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல! ஏனெனில் நபிகளார் கூறியதை நபித்தோழர்கள் மட்டுமே கேட்டிருக்க முடியும்..மேலும் இந்த செய்தி சுனன் ஸயீத் பின் மன்ஸூர் என்ற நூ­ல் பாகம் :2, பக்கம் :278, ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த செய்தியின் கீழ் அதன் ஆசிரியர் ‘இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.மேலும் இந்த செய்தியில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் ஹிஜாஸ் மற்றும் வேறு ஊர் வழியாக அறிவித்தால் பலவீனமாகும் இந்த செய்தியில் இடம் இஸ்மாயில் பின் அய்யாஷ என்பவர் யாரிடம் செவியுற்றாரோ அந்த ஸயீத் என்பவர் ஜவ்ஸஸான் என்ற ஊரில் பிறந்து மக்காவில் இறந்தவராவார். (நூல் தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 4, பக்கம் : 78)எனவே இந்த செய்தி மேலும் பலவீனமடைகிறது.
மேலும் இந்த செய்தி இப்னு ஹிப்பான் பாகம் 6 பக்கம் 312 ல் இடம் பெற்றுள்ளது இதில் ஹஸன் அவர்கள் ஜுன்துப் (ரலி­) வழியாக கேட்டதாக இடம்பெற்றுள்ளது.ஹஸன் அவர்கள் தத்லீஸ் செய்பவர். (நூல் : தக்ரீபுத் தஹ்தீப் பாகம் : 1, பக்கம் : 160)
தத்லீஸ் என்பது ஒருவர் தான் நேரடியாக கேட்காத ஒருவரிடம், கேட்டிருக்கவும் கேட்காமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ள வார்த்தைகளை பயன்படுத்தி அறிவிப்பார். எனவே இவர் போன்றவர்கள் தனக்கு அடுத்துவரும் அறிவிப்பாளரிடம் நான் செவியுற்றேன், அவர் எனக்கு அறிவித்தார் என்று தெளிவாக கூறினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த செய்தியில் ஹஸன் அவர்கள் தனக்கு அடுத்துவரும் அறிவிப்பாளர் ஜ‎ன்துப் (ரலி­) அவர்களிடம் நேரடியாக கேட்டேன் என்று அறிவிக்கும் வாசகத்தில் கூறாததால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.
மேலும் இச்செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம் :1, பக்கம் :255, மற்றும் அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம் : 4, பக்கம் : 21, ஆகிய நூல்களிலும் வேறொரு வழியாக வந்துள்ளது.
 எனினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் அக்லப் இப்னு தமீம் என்பவர் இடம் பெறுகிறார், இவரும் பலவீனமானவரே. (நூல் : அல்லுஅபாவு வல் மத்ருகீன்லிநஸயீ, பாகம் : 1, பக்கம் : 20)
இன்னும் இதே ஹதீஸ் ஸுஅபுல் ஈமான் பாகம் : 2, பக்கம் : 481 ல் இடம் பெற்றுள்ளது.  இதிலும் மேலே விமர்சனம் செய்யப்பட்ட யாரென அறியப்படாத அபூ உஸ்மான் என்பவரே இடம் பெற்றுள்ளார். 

  *********************************************************************************
தட்டில் எழுதி கரைத்து குடியுங்கள்
(7)


سُورَةُ يس تُدْعَى فِي التَّوْرَاةِ الْمُعِمَّةَ " . قِيلَ : وَمَا الْمُعِمَّةُ ؟ قَالَ : " تَعُمُّ صَاحِبَهَا بِخَيْرِ الدُّنْيَا وَالآخِرَةِ , وَتُكَابِدُ عَنْهُ بَلْوَى الدُّنْيَا , وَتَدْفَعُ عَنْهُ أَهَاوِيلَ الآخِرَةِ , وَتُدْعَى الْمُدَافِعَةَ الْقَاضِيَةَ , وَتَدْفَعُ عَنْ صَاحِبِهَا كُلَّ سُوءٍ , وَتَقْضِي كُلَّ حَاجَةٍ , وَمَنْ قَرَأَهَا عَدَلَتْ لَهُ عِشْرِينَ حِجَّةً , وَمَنْ سَمِعَهَا عَدَلَتْ لَهُ أَلْفَ دِينَارٍ فِي سَبِيلِ اللَّهِ , وَمَنْ كَتَبَهَا ثُمَّ شَرِبَهَا أَدْخَلَتْ جَوْفَهُ أَلْفَ دَوَاءٍ ، وَأَلْفَ نُورٍ ، وَأَلْفَ يَقِينٍ ، وَأَلْفَ بَرَكَةٍ , وَأَلْفَ رَحْمَةٍ ، وَنَزَعَتْ مِنْهُ كُلَّ غِلٍّ وَدَاءٍ " .
‏(‏الحكيم، والبيهقى فى شعب الإيمان وضعفه عن أبى بكر‏)‏‏.‏
ذكره الحكيم ‏(‏3/258‏)‏، وأخرجه البيهقى فى شعب الإيمان ‏(‏2/480، رقم 2465‏)‏ وقال‏:‏ تفرد به محمد بن عبد الرحمن هذا عن سليمان وهو منكر‏.‏
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சூரத்துல் யாஸினை தவ்ராத்தில் ‘அல் முயிம்மா’ (அனைத்தையும் சேர்த்துக் கொள்ளக்கூடியது) என்று அழைக்கப்படும் என்று கூறினார்கள் அப்போது ‘முயிம்மா’ என்றால் என்ன என்று கேட்டகப்பட்டது. அதற்கு, அதனை ஓதக்கூடியவருக்கு இம்மை மறுமையின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இம்மை மற்றும் மறுமையின் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். மறுமையின் பயங்கர சூழ்நிலையும் விலகிவிடும் என்று பதிள­த்தார்கள்.இன்னும் இந்த சூராவிற்கு தாஃபிஆத்துல் காழிஆ (விதியை மாற்றக்கூடியது) என்று அழைக்கப்படும். அதாவது அதனை ஓதக்கூடியவருக்கு (தீங்கை) விட்டும் தடுக்கும், அவரின் தேவைகளை நிறைவேற்றும். யார் அதனை ஓதுகிறாரோ அவர் பத்து ஹஜ் செய்தவரைப் போன்றவராவார். யார் அதை ஓதக்கேட்கிறாரோ அவருக்கு ஆயிரம் தீனார் அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்ததின் (நன்மை) எழுதப்படும்.இன்னும் யார் அதை எழுதி பின்பு குடித்து விடுகிறாரோ அவருடைய உள்ளத்தில் ஆயிரம் மருந்துகள் நுழைந்து விட்டன. ஆயிரம் ஒளியும், ஆயிரம் உறுதியும், ஆயிரம் பரகத்தும் ஆயிரம் ரஹ்மத்தும் அவருக்கு கொடுக்கப்படும். இன்னும் அவரை விட்டும் ஒவ்வொரு நோயும் மோசடித் தன்மையும் நீங்கிவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : ஷ‎அபுல் ஈமான் பாகம் : 2, பக்கம் : 480)

இதனை பதிவு செய்த ஆசிரியர் அவர்கள், இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில்” இந்த செய்தியை சுலைமான் என்வரிடமிருந்து முஹம்மத் பின் அப்திர்ரஹ்மான் என்பவர் மட்டுமே அறிவிக்கிறார். இவர் நிராகரிக்கப்பட்டவர்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இதே செய்தியை வேறு அறிவிப்பாளர் வழியாக கதீப் பக்தாதி அவர்கள் தனது ‘தாரீக் பக்தாத்’ என்று நூ­ல் பதிவு செய்துள்ளார்கள். (பாகம் : 2, பக்கம் : 387). அதன் கீழே ‘ இந்த அறிவிப்பாளர் வரிசை பொய்யானதாகும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

 *********************************************************************************(8)
மலக்குகள் கலந்து கொள்வார்கள்

أخبرنا أبو محمد عبد الرحمن بن محمد الأدفوي ثنا أبو الطيب أحمد بن سليمان الجريري إجازة أبنا أبو جعفر محمد بن جرير الطبري حدثني زكريا بن يحيى ثنا شبابة ثنا مخلد بن عبد الواحد عن علي بن زيد بن جدعان وعطاء بن أبي ميمونة عن زر بن حبيش عن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه و سلم : إن لكل شيء قلبا وإن قلب القرآن يس ومن قرأ يس وهو يريد بها الله عز و جل غفر الله له وأعطي من الأجر كأنما قرأ القرآن اثنتي عشر مرة وأيما مسلم قرئ عنده إذا نزل به ملك الموت سورة يس نزل بكل حرف من سورة يس عشرة أملاك يقومون بين يديه صفوفا يصلون عليه ويستغفرون له ويشهدون غسله ويشيعون جنازته ويصلون عليه ويشهدون دفنه وأيما مسلم قرأ يس وهو في سكرات الموت لم يقبض ملك الموت روحه حتى يجيئه رضوان خازن الجنة بشربة من شراب الجنة فيشربها وهو على فراشه فيقبض ملك الموت روحه وهو ريان فيمكث في قبره وهو ريان ويبعث يوم القيامة وهو ريان ولا يحتاج إلى حوض من حياض الأنبياء حتى يدخل الجنة وهو ريان
ஒவ்வொன்றுக்கு ஒரு இதயம் உண்டு, திருக்குர்ஆனின் இதயம் யாஸீன் அத்தியாயமாகும். யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தை நாடி இதை ஓதுவாரோ அவரை மன்னிப்பான், அவர் திருக்குர்ஆனை 12 தடவை ஓதிய கூ­யை கொடுப்பான். எந்த முஸ்­ம் (மரணித்தவரிடம்) இதை ஓதுவாரோ அங்கு மலக்குல் மவ்த் (உயிரை கைப்பற்றும் வானவர்) யாஸீûன் கொண்டு இறங்குவார். யாஸீனின் ஒவ்வொரு வசனத்தையும் 12 மலக்குகள் கொண்டு இறங்குவார்கள். அவர்கள் அவருக்கு முன்னால் அணிவகுத்து நிற்பார்கள், அவருக்காக அருளை வேண்டுவார்கள், பாவமன்னிப்பு கேட்பார்கள், அவரை குளிப்பாட்டும் போது கலந்துகொள்ளவார்கள, ஜனாஸாத் தொழுகையிலும் அடக்கும் செய்வதிலும் கலந்து கொள்வார்கள், யார் மரணநெருக்கத்தில் இருப்பரிடத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய உயிரை சுவர்க்கத்தின் காவலாளி சுவர்க்கத்தின் பானத்தைக் கொண்டு வந்து அவரின் விரிப்பில் அவர் இருக்கம் நிலையில் அதை அருந்தும் வரை மலக்குல் மவ்த் கைப்பற்ற மாட்டார். அவர் தாகம் தீர்ந்தவராக இருக்கும் நிலையில் அவரின் உயிரை மலக்குல் மவ்த் உயிரை கைப்பற்றுவார், அவர் தாகம் தீர்ந்தவராகவே கப்ரில் தங்கியிருப்பார், மறுமை நாளில் தாகம் தீர்ந்தவராகவே எழுப்படுவார், இவர் நபிமார்களின் (தாகம் தீர்க்கும்) தடாகத்தின் பக்கம் தேவைப்படமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்னத் ஷிஹாப் பாகம் : 2, பக்கம் : 130)
இதன் அறிவிப்பாளர் தொடரில் முகல்லத் பின் அப்துல் வாஹித் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பொய்யராவார். (நூல் : ­ஸானுல் மீஸான் பாகம் : 6, 

மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றிருக்கும் அ­ பின் ஸைத் அல் ஜ‎த்ஆன் என்பவரும் பலவீனமானவரே! (அல்லுபாவு வல் மத்ருகீன் பாகம் : 2 பக்கம் :193)

********************************************************************************
பாவங்கள் மன்னிக்கப்படும்
(9)


'' مَنْ قَرَأَ يس أَصْبَحَ مَغْفُورًا لَهُ ، وَمَنْ قَرَأَ الدُّخَانَ لَيْلَةً أَصْبَحَ مَغْفُورًا لَهُ "
، في إسناده : محمد بن زكريا ، وضاع ، ورواه الدارقطني من طرق عمر بن راشد ، وهو أيضًا : وضاع ، قال في اللآلئ : أخرجه الترمذي ، ومحمد بن نصر في كتاب الصلاة ، قلت : ولكن من طريق عمر بن راشد المذكور ، قلت : وقد رواه الترمذي من غير طريقه بلفظ : من قرأ حم الدخان في ليلة الجمعة غفر له ، وفي لفظ له آخر : من قرأ سورة الدخان في ليلة غفر له ما تقدم من ذنبه ، ورواه أيضًا : محمد بن نصر بنحوه ، من طريق أخرى غير طريق عمر بن راشد ، ورواه الدارمي أيضًا .
யார் இரவில் யாஸின் சூராவை ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கபட்டவராக விடுகிறார், யார் துகான் அத்தியாயத்தை இரவில் ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கபட்டவராக விடுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்னத் அபீ யஃலா பாகம் : 11, பக்கம் : 93)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹிஸாம் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அபூஸர்ஆ, புகாரி போன்றோர் விமர்சனம் செய்துள்ளனர். (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 11, பக்கம் : 36)
இதே செய்தியை இமாம் பைஹகீ தனது ‘ஷுஅபுல் ஈமான்’ பாகம் : 2, பக்கம் : 484 ல் பதிவு செய்துவிட்டு இதை ஹிஷாம் என்பவர் தனித்து அறிவிக்கிறார், இவர் பலவீனமானவராவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம் : 1, பக்கம் :255 ல் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அக்லப் பின் தமீம்’ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நிராகரிக்கப்பட்டவர். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜிஸ்ர் பின் பர்கத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவரே. (நூல் : லுபாவுல் உகை­, பாகம் : 1, பக்கம் : 203)
*********************************************************************************(10)
مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ أَصْبَحَ مَغْفُورًا لَهُ , وَمَنْ قَرَأَ الدُّخَانَ لَيْلَةَ الْجُمُعَةِ أَصْبَحَ مَغْفُورًا لَهُ " ( ابن أبي داود ) من حديث أبي هريرة ، وفيه محمد بن زكريا الغلابي ( تعقب ) بأن له طرقا كثيرة عن أبي هريرة بعضها على شرط الصحيح ، أخرجه الترمذي والبيهقي في الشعب من عدة طرق ( قلت : ) ورأيت بخط الحافظ ابن حجر على هامش مختصر الموضوعات لابن درباس ما نصه قلت : أخرج ابن حبان في صحيحه من حديث جندب البجلي مرفوعا : من قرأ يس في ليلة ابتغاء وجه الله غفر الله له والله أعلم . .

யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­), நூல் : தாரமி (3283)

இச்செய்தியை அபூஹுரைரா (ரலி­) அவர்களிடமிருந்து ஹஸன் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் இவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்த செய்தியையும் செவியுறவில்லை. (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :2, பக்கம் : 231)
எனவே இந்த செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.
*********************************************************************************
அல்லாஹ் ஓதிய அத்தியாயம்
(11)

அல்லாஹ் தஆலா இந்த வானம் பூமி படைக்கப்படுவதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன் யாஸீன் அத்தியாயத்தையும் தாஹா அத்தியாயத்தையும் ஓதினான். மலக்குமார்கள் (இந்தக்) குர்ஆன் வசனங்களை கேட்டவுடன் இந்த அத்தியாயம் எந்த உம்மத்திறகு இறங்குகிறதோ அந்த உம்மத்திற்கு சுபச்செய்தி உண்டாகுவதாக! எந்த உள்ளம் இதை சுமக்கிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாகுவாக! எந்த நாவு இதை ஓதுகிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாகுவதாக! என்று சொன்னார்கள் என நபிகளார் கூறினார்கள். (நூல் : தாரமி (3280)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர். (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 1, பக்கம் : 147)
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் ஹப்ஸ் என்பவரும் இடம் பெருகிறார். இவரும் பலவீனமானவரே!.
(அல்லுஆபாவு வல் மத்ருகீன்லி இப்னுல் ஜவ்ஸீ, பாகம் : 2, பக்கம் : 206)
 ************ ********* **************** ****** ***** ********* *********************
தேவைகள் நிறைவேற்றப்படும்
யார் பக­ன் ஆரம்ப நேரத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய தேவைகள் நிறைவேற்றப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : தாரமி 3284)
இந்த செய்தி  நபிகளார் கூறியதாக அறிவிக்கும் அதா பின் அபீ ரபாஹ் என்பவர் நபித்தோழர் இல்லை. நபிகளாரின் செய்திகளை நபித்தோழர்கள் மட்டுமே கேட்டிருக்க முடியும் எனவே இந்த செய்தி பலவீனமான முர்ஸலான எனும் வகையைச் சார்ந்ததாகும்.
 ************ ********* **************** ****** ***** ********* *********************
பெற்றோர் பாவங்கள் மன்னிக்கப்படும்
யார் தன்னுடைய தாய், தந்தையர்களின் ஒருவரின் கப்ரையோ அல்லது இருவரின் கப்ரையோ வெள்ளிக்கிழமை தோறும் சந்தித்து அங்கு யாஸீன் அத்தியாயத்தை ஓதினால் ஒவ்வொரு ஆயத் அல்லது எழுத்து அளவுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் அபூபக்கர் (ர­)
(நூல்:தபகாத்துல் முஹத்தீஸீன் பி உஸ்பஹான் பாகம்:3,பக்கம் : 331)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அம்ரு பின் ஸியாத் அல் பக்கா­ என்பவர் பொய்யராவார். (நூல் : அல்காமில் பீ லுபாஇர்ரிஜால்லிஇப்னு அதீ, பாகம் :5, பக்கம் : 151, மீஸானுல் இஃதிதால் பாகம் :5, பக்கம் : 316)
************ ********* **************** ****** ***** ********* *********************
கப்ர் வேதனை குறைக்கப்படும்
யார் கப்ருகளின் பக்கம் சென்று (அங்கு) யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு அன்றைய நாள் வேதனை (கப்ராளிகளுக்கு) இலேசாக்கப்படும். அதில் உள்ள (ஒவ்வொரு எழுத்துக்கும்) அவரு(ஓதுபவரு)க்கு நன்மைகள் இருக்கினறன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் அனஸ் பின் மா­க் (ர­)       (தப்ஸீர் ஸஃலபி, பாகம் : 3, பக்கம் : 161)

இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அய்யூப் பின் மித்ரக் என்பவர் பொய்யராவார். (மீஸானுல் இஃதிதால், பாகம் : 1, பக்கம் : 463)
மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூஉபைதா என்பவரும் ஆறாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அஹ்மத் அர்ரியாஹீ என்பவரின் நம்பத்தன்மையைப் பற்றி (நாம் பார்த்த வரை) எந்த நூ­ல் குறிப்பிடப்படவில்லை. எனவே இது இன்னும் பலவீனம் அடைகிறது.
************ ********* **************** ****** ***** ********* *********************
ஷஹீதாக மரணிப்பார்
யார் தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் யாஸின் அத்தியாயத்தை ஓதி வந்து மரணித்துவிட்டால் அவர் ஷஹீதாக மரணித்தவராக கணிக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.    (நூல் அல்முஃஜமுஸ் ஸகீர்லிதப்ரானீ, பாகம் : 2, பக்கம் : 191)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஸயீத் பின் மூஸா அல் அல் அஸ்தி என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பொய்யராவார். (நூல் ­ஸானுல் மீஸான் பாகம் : 3, பக்கம் : 44)

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு தொடர்பாக நபிகளார் சொன்னதாக பல செய்திகளைப் பார்த்தோம். இதைப்போன்று நபிகளார் அல்லாத பலரும் இது தொடர்பாக பல செய்திகளை குறிப்பிட்டுள்ளார். அவற்றையும் பார்ப்போம்.
பிரசவ வேதனை குறையும்
யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படும், யார் பசியுள்ள நிலையில் அதை ஓதுவாரோ அவர் வயிர் நிரம்புவார், யார் வழிதவறிய நிலையில் ஓதுவாரோ அவர் வழியை அடைந்து கொள்வார், யார் பொருளை தவற விடுவாரோ அதை அவர் பெற்றுக்கொள்வார், உணவு குறைந்துவிடும் என பயந்து உணவிருக்குமிடத்தில் அதை ஓதுவாரோ அவர் அதை போதுமானதாக பெற்றுக்கொள்வார். இறந்தவரிடத்தில் ஓதினால் வேதனை இலேசாகும். பிரசவ வேதனையில் இருக்கும் பெண்ணிடம் ஓதினால் அவருடைய பிரசவம் லேசாகும். மேலும் யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவர் குர்ஆனை பதினொரு தடவை ஓதியவர் போன்றவராவார். ஒவ்வொன்றுக்கும் இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் யாஸீன் ஆகும் என்று அபூகிலாபா என்பார் கூறுகிறார்.   (நூல் ஷஅபுல் ஈமான், பாகம் : 5., பக்கம் : 478)

இந்த ஹதீஸை அபூகிலாபா என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழந்த காலத்தில் இருந்தவர்) ஒரு அத்தியாயத்திற்கு குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூறவேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூறமுடியும் எனவே அபூகிலாபா அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது.மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் கலீல் பின் முர்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவரை பு‎காரி உட்பட பலர் விமர்சனம் செய்துள்ளனர்.(நூல் : தஹ்தீப் தஹ்தீப், பாகம் : 3, பக்கம் : 146)

*********************************************************************************
முழுக் குர்ஆன் ஓதிய நன்மை
யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். மேலும் அது முழு குர்ஆனை ஓதியதற்கு சமமாகும் என்று ஹஸன் பஸரி அவர்கள் கூறுகிறார்கள்.    (நூல் : தாரமி 3281)
இது ஹஸன் அவர்களின் சொந்த கூற்றாகும். நபிகளார் சொல்லாததால் இந்த கருத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளமுடியாது.மேலும் இச்செய்தியில் அபூல் வலீத் மூஸா பின் கா­த் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்று அறியப்படாதவர். (நூல் : தஹ்தீபுத்தஹ்தீப், பாகம் : 10, பக்கம் : 304)

மகிழ்ச்சிக்கு ஓர் அத்தியாயம்
யார் யாஸீன் அத்தியாயத்தை காலையில் ஓதுவாரோ அவர் மாலை வரை சந்தோஷமாக இருப்பார், யார் மாலையில் ஓதுவாரோ அவர் காலை வரை சந்தோஷமாக இருப்பார் என்று யஹ்யா பின் கஸீர் என்பார் அறிவிக்கிறார்.
(நூல் : பழாயிலுல் குர்ஆன்லி முஹம்மத் பின் லரீஸ், பாகம் : 1, பக்கம் : 230)

இது யஹ்யா பின் அபீ கஸீர் என்பவரின் சொந்த கூற்றாகும். இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர் நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் கூற்று மார்க்க ஆதாரமாக ஆகாது.

மேற்கூறிய செய்திகளை வைத்துதான் யாஸீன் அத்தியாயத்தை பல சந்தர்ப்பங்களில் ஓதிவருகிறார்கள். ஆனால் யாஸீன் அத்தியாயத்திற்கு தனியான சிறப்புகள் உள்ளதாக ஆதாரப்பூர்மான எந்த செய்தியும் இல்லை. பொதுவாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதினால் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள் உண்டு, அந்த சிறப்பு யாஸீன் அத்தியாயத்திற்கும் உண்டு. இது தவிர வேறு தனியான எந்த சிறப்புகளையும் ஆதாரப்பூவமான ஹதீஸ்களில் காணமுடியவில்லை. எனவே ஆதாரமற்ற செய்திகளை அடிப்படையாக கொண்டு எந்த அமலையும் செய்யக்கூடாது.

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. (அல் குர்ஆன் 17 36)

ஆகையால் நாம், ஆதாரப்பூர்வமான செய்திகளை வைத்து நம்முடைய அமல்களை அமைத்து கொள்வோமாக.

3/26/2015

சாதரணமானவர்கள் குர்ஆன் ஹதீஸை எப்படி விளங்க முடியும்?

முஸ்லிம்களில் பலர் நாங்கள் சாதரணமானவர்கள் குர்ஆன் ஹதீஸை எப்படி
விளங்க முடியும்? மொழிபெயர்ப்புகளைத்தானே நம்ப வேண்டியுள்ளது என மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் அர்த்தமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். இது குர்ஆன் ஹதீஸையே பின்பற்றவேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்குக் கூட தடுமாற்றத்தை ஏற்படுத்தும் தவறான  வாதமாகும் இது.
குர்ஆனும் ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மைதான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத்தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மைதான். இந்த காரணங்களுக்காகத்தான் அரபு மொழி அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழியில்தான் சட்டங்களை எழுதினார்களா? நான்கு இமாம்களும் தங்கள் தாய் மொழியாக அரபி மொழியைக் கொண்டவர்களே. அவர்கள் எழுதிய அல்லது எழுதியதாக சொல்லப்படுகின்ற நூல்கள் யாவும் அரபு மொழியில் அமைந்தனவையே.
இதே வாதத்தின்படி இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதாலும், அந்த இமாம்கள் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும் அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையே அது ஏன்? இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்.
மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால்தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாக கூறுகிறார்கள். அரபு மொழியில் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்டங்கள் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால், இந்த நியாயம் குர்ஆன் ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?
தவறுகளும் சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபு மொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால், தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆனும் உண்மையான ஹதீஸ்களும் தமிழாக்கம் செய்யப்படும்போது மட்டும் ஏன் விளங்காது?
மொழி பெயர்ப்புகளில் மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன் ஹதீஸில் மட்டுமின்றி எல்லா மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். சிலவேளை அரபு மொழி அறியாதவர்களால் கண்டுபிடிக்காமலும் போகும். ஆனால் அதற்காக குர்ஆன் ஹதீஸை விட்டு விடமுடியுமா? விட்டுவிட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உட்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.
நம்மால் இயன்ற அளவு முயற்சித்துப்பார்த்து விட்டு மொழி பெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன் ஹதீஸை விளங்காது என்று அலட்சியம் செய்வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில், புத்தகங்களில் குர்ஆன் ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகிறார்களே! விளங்காத குர்ஆன் ஹதீஸை ஏன் மக்களிடம்  கூறவேண்டும். மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன் ஹதீஸ்கள் கூறினால் விளங்கும். மற்ற விஷயங்களுக்கு விளங்காதா? இதெல்லாம் ஏமாற்று வேலை. ஷைத்தானின் மாயவலை.
நன்றி : http://www.readislam.net

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!
இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் பெரும்பகுதியினர் ‘தக்லீத்’ (கண்மூடிப்பின்பற்றல்) மரியாதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.


هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
அவன்தான் எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2)

உண்மையில் குர்ஆன் எழுதப்படிக்க தெரியாத அறியாமையிலும் வழிகேட்டிலும் மூழ்கி கிடந்த மக்களுக்காகத் தான் இறங்கியது.  இந்த  வசனப்படி  95% சஹாபாக்கள்  குர்ஆனை   நபி(ஸல் அவர்களின் விளக்கத்தின் துணையோடு  தெளிவாகப் புரிந்து  கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில்  நாங்கள் தான் கற்றவர்கள், அரபி  இலக்கண  இலக்கிய  விற்பன்னர்கள் என்று  மார்தட்டிய  “தாருன் நத்வா” (அறிஞர்கள் சபை)  தலை சிறந்த அறிஞர்கள் என்று மக்களால் போற்றப்பட்டவர்களை வடிகட்டிய ஜாஹில்கள் என்றும், ஜாஹில்கள் என்று தூற்றப்பட்டவர்களை தலை சிறந்த அறிஞர்கள் என்றும் உலகம் சொல்லும் ஒரு மாபெரும் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்தி காட்டியது. உண்மையில் இது மாபெரும் அதிசயம்தான்.
ஆம்! நாங்கள் தான் கற்றவர்கள் அரபி இலக்கண இலக்கியம் அறிந்தவர்கள் என்று அகந்தையுடன் மார் தட்டியவர்கள் அன்று குர்ஆனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதே வேளையில் அரபி இலக்கணம் இலக்கியம் அறியாத பாமர மக்களாகிய அன்றைய அரபிகள் பயபக்தியுடையவர்களாகவும் (புலன்களுக்கு எட்டாத) மறைவானவற்றை  நம்பியவர்களாகவும் தொழுகையை அதனதன்  நேரத்தில்  தவறாமல் நிறை வேற்றக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். உண்மையில் குர்ஆனை ஓதி விளங்க முற்பட்டால் நிச்சயமாக குர்ஆனை சரியாக விளங்கிக் கொள்ள முடியும். இது அல்லாஹ் கொடுக்கும் உத்திரவாதமாகும்.

ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(2:2)
الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُون
(பயபக்தியுடைய) அவர்கள் (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைபிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள்.(2:3)
والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.(2:4)
أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். வசனம் (2:5)

குர்ஆனிலும், ஹதீஸிலும் பாடுபடும் முயற்சியும் அதற்கு மேல் அரபி இலக்கண இலக்கிய ஞானம் இருந்தால் அதை நாம் வரவேற்கிறோம். அதனை நாம் மறுக்கவில்லை. இன்னும் பாடுபடுபவர்களில் சிலருக்கு ஞானத்தை அல்லாஹ் அதிகமாகவும் கொடுத்துவிடலாம். இது அல்லாஹ் அவருக்குக் கொடுத்த சிறப்பு ஆகும்.
يُؤتِي الْحِكْمَةَ مَن يَشَاء وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيراً وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الأَلْبَابِ
தான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு)ஞானம் எவருக்கு கொடுக்கப்படுகின்றதோ,  அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக  நிச்சயமாக  ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைத் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (2:269)
இந்த வசனப்படி இந்த சிறப்பைப் பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டு அந்த ஞானத்தைக்கொண்டு மற்ற மக்களுக்கும் குர்ஆன், ஹதீஸை விளங்கவைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டுமே அல்லாது சமுதாயத்தை இரு பிரிவினர்களாக்கி நாங்கள்தான் மார்க்கத்தை போதிக்கும் உரிமை பெற்றவர்கள் நாங்கள் சொல்வதை  கண்ணை மூடிக்கொண்டு  ஆதாரங்களை கேட்காமல்  ஏற்று  நடக்க  வேண்டும் என்று சமுதாயத்தில் ஒருபோதும் முனையக்கூடாது. இதனால்தான்”தக்லீத்”எனும் கண்மூடிப்பின்பற்றலும் மதப்பிரிவுகளும் சமுதாயப் பிளவுகளும் வீழ்ச்சிகளும் ஏற்படுகின்றன.
اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3)
இந்த வசனத்தில் இப்போது நாம் எங்களுக்கு குர்ஆன் தெரியாது ஹதீஸ் தெரியாது அவற்றை அறிந்து கொள்ள அரபியும் தெரியாது அதற்கு நேரமும் இல்லை. அந்த நாதாக்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் முழுவதும் மார்க்கத்திற்காக அர்பணித்தவர்கள். பகல் இரவென்று பாராது பாடுபட்டவர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கரைத்துக் குடித்தவர்கள், அரபி இலக்கண இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், பதினாறு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். குர்ஆனைப் பற்றியும், ஹதீஸைப் பற்றியும் அவர்களுக்கு தெரியாததையா நாங்கள் தெரிந்து கொள்ளப் போகிறோம். ஆகவே அவர்களை எங்கள் பாதுகாவலர்களாக்கி அவ்ர்களை எங்கள் இமாமாக ஆக்கி அவர்க்ளைப் பின்பற்றுகிறோம் என்று நாம் சொல்கிறோமே இதைத்தான் மிக வண்மையாக அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.
நபி(ஸல்) அவர்களை பின்பற்றுகிறோம் என்றால் நாமாக பின்பற்றவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவர்களை பின்பற்றியே ஆக வேண்டுமென்று பல வசனங்களில் கட்டளையிட்டதை வைத்தே பின்பற்றுகிறோம். வேறு யாரையும் பின்பற்ற அல்லாஹ் உத்தரவிடவில்லை. அதனால் நபி (ஸல்) அவர்களைத்தவிர வேறு யாரையும் அது ஒருவராக இருந்தாலும், பலராக இருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை பாதுகாவலர்களாக்கி பின்பற்றவே கூடாது. அப்படி இருந்தும் நம்மில் வெகு சிலரே இந்த உண்மையைக் உணரக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُوْلَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُوْلَئِكَ هُمْ أُوْلُوا الْأَلْبَاب
அவர்கள் சொல்லை – நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள்.அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.(39:18)

விளங்கிச் செயல்படுவது கண்மூடிப்பின்பற்றல் அல்ல
பிக்ஹூ நூல்களை தந்த இமாம்கள், ஹதீஸ் நூல்களை தந்த இமாம்கள் அதற்கு பின்னால் வந்த பலநூறு இமாம்கள் ஏன்? சாதாரண நபர் முதல் யார் சொல்லி இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீஸ்படி  இருக்கிறதா? என்று  பார்த்து விளங்கி ஏற்று  நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். அதே போல் யாருடைய சொல்லாக இருந்தாலும் அது குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அதை புறக்கணித்தலே குர்ஆன், ஹதீஸ் வழி நடப்பதாக இருக்கும்.
اتَّخَذُواْ أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُواْ إِلاَّ لِيَعْبُدُواْ إِلَـهًا وَاحِدًا لاَّ إِلَـهَ إِلاَّ هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.(9:31)

என்ற திரு வசனம் இறங்கியபோது கிறிஸ்த்தவராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் இணைந்த ‘அதீ இப்னு ஹாதம்’ (ரலி) என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்க வில்லையே! (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாக) நீங்களூம் கருதினீர்கள் அல்லவா? அதுதான் அவர்களை கடவுள்களாக கருதியதற்கு நிகரானது என்று விளக்கம் தந்தார்கள். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதீ)
இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித்தனமாக பின்பற்ற எவருக்கும் மார்க்கத்தில் அனுமதியில்லை. மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதற்குறிய ஆதாரங்கள் அறிய முயற்சிக்காமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது மிகப்பெரும் குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்குகின்றது.
அல்லாஹ் நம்  அனைவருக்கும்  இருளிலிருந்து  வெளிச்சத்திற்கு  வந்து  அவனது  நேர்வழியில்  நடக்க அருள் புரிவானாக! ஆமீன்!

3/24/2015

கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்தல்

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!  அல்குர்ஆன் 108:2

இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

"யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.   அறிவிப்பவர்: அலீ (ரலி)     நூல்: முஸ்லிம் 4001

"யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)   நூல்: புகாரி 6696

'புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) நூல்கள்: அபூதாவூத், பைஹகீ. 

அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் உயிரே போய் விடும் என்ற நிலை ஏற்பட்டாலும், எதனையும் பலியிடக் கூடாது. அற்ப ஈ போன்ற மதிப்பற்ற உயிரினங்களைக் கூட, அல்லாஹ் அல்லாதவர்களுக்குப் பலியிடக் கூடாது; நேர்ச்சை செய்யக் கூடாது  என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையும் அறுத்துப் பலியிடலும் ஒரு இபாதத் - வணக்கம் என்பதை எவர் அறியவில்லையோ, அதன் படி நடக்கவில்லையோ, அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்குத் தகுதி பெறுகிறார்கள்.

எனவே கப்ருகளுக்கு அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் என்ற வணக்கங்களைச் செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!
நேர்ச்சையும் வணக்கமே! 

தங்களின் நோய் நீங்கி விட்டால், அல்லது கோரிக்கை நிறைவேறினால், அவ்லியாவே! உங்களுக்காக நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன்' என்று கூறுபவர்களும், அவ்வாறே செயல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர். நேர்ச்சை ஒரு வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் இவ்வணக்கத்தை இறைவனல்லாத எவருக்கும் செய்ய மாட்டார்கள். 

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (அல்குர்ஆன் 2:270) 

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும். (அல்குர்ஆன் 22:29) 

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 76:7) 

நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், இறைவனுக்காகச் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் இந்த வசனங்கள் மூலம் கற்றுத் தருகிறான். 

இறைவா! நீ இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உனக்காகத்தொழுகிறேன்; நோன்பு வைக்கிறேன்; உனக்காக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறேன்; உனக்காக அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறேன் என்பது போல் தான் நேர்ச்சை செய்ய வேண்டுமே தவிர இறைவனல்லாத எவருக்கும் நேர்ச்சை செய்யலாகாது. 

அறியாத காலத்தில் அவ்வாறு நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றவும் கூடாது. 'யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696.

மத்ஹபின் பார்வையில் நேர்ச்சையும் மவ்லூதும் !!

அறிந்து கொள் பெரும்பாலான பாமரர்கள் இறந்தவர்களுக்காக செய்யும் நேர்ச்சையும், அவு­யாக்களுக்கு காணிக்கையாக அவர்களின் அடக்கஸ்தலங்களுக்கு காசுகளையும், மெழுவர்த்திகளையும், என்னெய் மற்றும் இது போன்றவைகளைக் கொண்டு செல்வதும் ஏகோபித்த முடிவுகளின் படி ஹராமாகும். ஏழைகளுக்கு தர்மம் செய்வதை நோக்கமாக கொண்டால் தவிர.
ரத்துல் முக்தார் பாகம் 2 பக்கம் 139


மேற்கண்ட காரியங்கள் கூடாததாகும் ஹராமானதாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இது போன்ற காரியங்கள் படைப்பினங்களுக்கு நேர்சசை செய்வதாக அமைந்துள்ளது. படைப்பினங்களுக்கு நேர்ச்சை செய்வது கூடாததாகும். ஏனெனில் நேர்ச்சை ஒரு வணக்கமாகும். எந்த வணக்கத்தையும் படைப்பினங்களுக்கு செய்யக்கூடாது இது முதல் காரணமாகும். யாருக்காக நேர்ச்சை செய்வது நோச்சை செய்யப்படுகிறதோ அவர் உயிரற்ற சடலமாகும். உயிரற்ற சடலம் எதையும் சொந்தமாக்கி கொள்ள முடியாது. இது இரண்டாவது காரணம்.
உயிரற்ற சடலம் காரியங்களை செய்யும் என்று எண்ணினால் அவ்வாறு நம்புவது குப்பர் ஆகும்.
அதே நூல் அதே பக்கம்.


படைப்பினங்களுக்கு நேர்சசை செய்வது ஹராம் என்பது அறிஞர்களின் ஒரு மித்த முடிவாகும் எனவே அது செல்லாது அதை நிறைவேற்றும் பொருப்புல் இல்லை. அது ஹராம் மற்றும் அது மாறாக லஞ்சமாகும்.
அதே நுல் அதே பக்கம்


அப்துல் காதிரிருக்காக பெண்கள் எண்னெய் நேர்ச்சை செய்கின்றனர். அது மினாராவில் விளக்கெரிக்கப்படுகிறது. இது போல் ஒரு பெயரில் அடக்கத்தலத்தில் மீது வினளக்கெரிய செய்வதற்காக என்னெய்யை நேர்சசை செய்தால் அதுவும் கூடாததாகும்.
அதே நுல் அதே பக்கம்


மவ்லீது ஓதுவதற்காக நேர்ச்சை செய்வது அதை விட அருவறுக்கத்தக்க காரியமாகும். குறிப்பாக ராகமும், விளையாட்டும் இதன் நன்மையை நபி ஸல் அவர்களுக்கு வாங்குவதாக நேர்ச்சை செய்வது மிகவும் அருவறுக்கத்தக்கதாகும்.
அதே நூல் அதே பக்கம்

மவ்லூத் ஓதலாம் என்பதற்கு ஆதாரம், குரான், சுன்னாவிலும் இல்லை, மத்ஹபிலும் இல்லை !!

தர்காஹ் என்பது என்ன? எதற்காக உருவாக்கப்பட்டது? யார் அறிமுகப்படுத்தியது?


தர்காஹ் என்பதன் விளக்கம்

தர்காஹ் என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே.

 இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்ப டுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த சூஃபிக்கள் தான் மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் (ஸல்) காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க வழிகேடாகும்.

 தர்காஹ் முதன்முதலில் எதற்காக கட்டப்பட்டது!

சூஃபியிஷத்தை பாரசீகத்திலிருந்து பரப்ப வந்த சுஃபியிஷத்தைச் சேர்ந்த சில மார்க்க ஞானிகள் (உங்களைப்போன்ற படிப்பறிவுள்ள அறிஞர்கள் இவர்களுக்கு எந்த மறை ஞானமுமில்லை) பாரசீகத்தில் நிலவி வந்த வன்முறைக் கொடுமைகளுக்கு ஆளாகி தங்கள் கொள்கையையும் உயிரையும் இழந்துவிடக்கூடாது என்றும் சூஃபி கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொண்டார்கள். 

 அன்றைய காலகட்டங்களில் இந்தியா செல்வச்செழிப்பில் தழைத் தோங்கியிருந்தது எனவே சொந்த தாய்நாட்டை துரந்த சூஃபி அறிஞர்கள் இந்தியாவில் தங்கள் கொள்கைகளை பரப்பி வந்தனர்.  இவர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தங்கள் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ஒரு இடத்தில் நிலையாக தங்கவும் (அதாவது ஹெட் ஆபிஸ்) அமைத்தனர்.

 இந்த தலைமைச் செயலகத்தில் இந்த சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கும் கஷ்ட நஷ்டங்களையும், நல்ல நிலைமைகளையும் பரிமாறிக் கொள்ளவும் சூஃபிக் கொள்கைகளை வீரியப்படுத்தவுமே பயன்பட்டது எனவேதான் நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் தர்காஹ் கட்டிடங்கள் (கிளை அலுவலகம்) எழுப்பினர் அந்த கட்டிடத்தில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதுவே தர்ஹா கட்டிடம் எனப்படும்.  இவ்வாறு இந்த கட்டிடங்களில் தங்குவதற்கு பாரசீக மொழியில் கான்காஹ் (khanqah) என்று அழைப்பர்.

 பின்னர் சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) மரணித்துவிட்டால் அவர்களை கவுரவப் படுத்தும் விதமாக அந்த கட்டிடங் களிலேயே கப்ரு தோண்டி அவரை அவ்லியாவாக பிரகடனப்படுத்திவிடுவார்கள் மேலும் அவர் தெய்வீக பதவியை அடைந்துவிட்டதாக எண்ணிக்கொள்வர் இது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஏன் அணுவளவும் தொடர்பில்லாத தத்துவமாகவும் தவறான கொள்கையுமாகும் மேலும் இவர்களுடைய இந்த அவ்லியா கொள்கை முற்றிலும் யுத கிருத்தவ கொள்கையின் அடிப்படையில் அமைந்ததாகும்! இதற்கு உதாரணம் வேண்டுமானால் கீழே உள்ளதை படியுங்கள்”

 கிருத்தவ கொள்கையுடன் தொடர்புடைய சூஃபிக்களின் அவ்லியா கொள்கை

கிருத்தவ மார்க்கத்தை பரப்ப வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த அன்னை தெரஸா அவர்கள் சென்ற 10 ஆண்டகளுக்கு முன்னர் (1997ல்) மரணித்தார் இந்த அம்மையார் செய்த சமுதாய தொண்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் போற்றப்பட்டு வருகிறது.

 இதை கண்ட வாடிகன் மத போதகர்கள் மற்றும் மதகுரு போபாண்டவர்  இந்த அம்மையாரை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணி இவரை செயின்ட் (தமிழில் சொல்வதாக இருந்தால் புனிதவதி என்றும் அரபியில் சொல்வதாக இருந்தால் அவ்லியா என்றும்) கூறி அவரை கடவுளுக்கு இணையான தர்ஜாவை (பதவியை) அளிக்க முயன்று வருகின்றனர்.

 இது ஒன்றே போதும் சூஃபிக்கள் பின்பற்றும் அவ்லியா கொள்கை யுத, கிருத்தவ மார்க்கத்தை தாயகமாக கொண்ட கொள்கை என்பதற்கு. இப்போது புரிகிறதா எவ்வாறு அவ்லியாக்கள் உறுவாகின்றனர் என்று. இந்த மூடப் பழக்கத்தை நாம் பின்பற்றலாமா?

 குறிப்பு

அன்னை தெரஸா உயிருடன் இருக்கும்போது என்றைக்காவது தான் மரணித்துவிட்டால் என்னை வணங்குங்கள் நான் உங்களுக்கு அருள்புரிகிறேன் என்று தொலைக்காட்சியிலோ, பத்திரிக்கைகளிலோ பேட்டி கொடுத்துச் சென்றார்களா?  இது இந்த அம்மையாருக்கு செய்யும் பச்சை துரோகமல்லவா?

 இந்த கிருத்தவ அம்மையாருக்கு இவர்களின் மதபோதகர்ள் செய்யும் கொடுமைகளை நம் கண்கள் முன்னே நன்மை தீமையை அல்லாஹ் படம் போட்டுக்காட்டுகிறானே இது அல்லாஹ்வின் அருள் இல்லையா! இதைக்கண்டும் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா? நாம் சிந்திக்கின் றோமா?

  சூஃபிக்களினால் தவறான பாதை காட்டப்பட்ட இந்தியர்கள்

 பிற்காலத்தில் சூஃபிக்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாற்றுமதத்தவர்கள் (நம் முன்னோர்கள்) சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) கூறுவதுதான் இஸ்லாம் என்று நம்பினார்கள் காரணம் அவர்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகள் தெரியவில்லை! பாவம் என்ன செய்ய முடியும்!

 ”ரோஜா மலரை வாழ்க்கையில் ஒருமுறை கூட கண்களில் கானாதவர்கள் முன் கல்லிச் செடியை காண்பித்து இதுதான் ரோஜா மலர் என்றால் நம்பித்தானே ஆகவேண்டும்”

 நாம் யாரை உயிரினிலும் மேலாக மதிக்கிறோமோ அவர்கள் விஷம் கலந்த பாலை நமக்கு கொடுத்தால் என்ன செய்ய முடியும் அப்பாவிகளாக மக்கள் அந்த விஷம் கலந்த பாலை குடித்து சாகத்தானே வேண்டும். இது நம்பிக்கை துரோகமல்லவா?

 இதே நம்பிக்கை துரோகத்தைதான் சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) அறியாத மக்களிடம் இஸ்லாம் என்று கூறி தங்கள் கெட்ட கொள்கைகளை பரப்பினார்கள் அதன் தாக்கம் இன்றளவும் உள்ளது.

 சகோதரரே இப்போது சொல்லுங்கள் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா?

 சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) கூறிய மார்க்க விரோத கொள்கையை ஏற்கலாமா?

கொடிகளை வணங்கும் பரலேவிகள்

சந்தனம், கொடிக்களை, நெருப்பை வணங்கும் பரேலவிகள்

பரேலவி மதத்தினர் தங்களது வணக்கத்தலங்களாகிய தர்ஹாக்களில் அவர்கள் கடவுளாக வணங்கும் கப்ருகளுக்கு சந்தனத்தைப் பூசுகின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் கற்சிலைகளுக்குப் பாலை ஊற்றி அபிஷேகம் செய்கின்றனர். அது போன்று கற்சிலையை விடக் கீழ் நிலையில் உள்ள கப்ருகளுக்கு சந்தன அபிஷேகம் செய்தல், சந்தனம் பூசுதல் என்பது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

அது போன்ற கப்ருகளில் பூசப்பட்ட சந்தனம் தங்களுக்கு பரக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதனைக் கழுத்துகளில் பூசிக் கொள்கின்றனர். இறைவனல்லாத ஒரு பொருள் இறைவனைப் போன்று நமக்கு நன்மை ஏற்படுத்தும் என நம்பிக்கை வைப்பதால் இதுவும் இணை கற்பிக்கின்ற காரியமே!
அது போன்று தர்ஹாக்களில் விளக்குகளை ஏற்றி வைத்து   அந்த நெருப்பைத் தொட்டு முத்தமிடுகின்றனர். அதற்கு விளக்கு ராத்திரி என்றும் பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதே நம்பிக்கையில் தான் கொடிக்களைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். நமக்கு துன்பத்தையும், இன்பத்தையும் ஏற்படுத்தக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

சந்தனமும், நெருப்பும், கொடிக் களைகளும் இறைவனைப் போன்று இன்ப துன்பங்களைத் தரக் கூடியவை என பரேலவி மதத்தினர் நம்பிக்கை வைத்திருப்பதால் கொடி ஊர்வலமும், தர்ஹாக்களில் விளக்கேற்றுவதும் இணை கற்பிக்கின்ற காரியங்கள் தாம் என்பதில் சந்தேகமில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------


கொடியை  வணங்கும் ஒருவரின் கேள்வி
:
//// கொடியேற்றுவது வழிகேடு என்று கூரிய வஹாபிகளின் நிழை என்ன?
Sltj கொடியை பகிரங்கமாக ஏற்றியுள்ளார்கள் அதே போல் TNTJ கொடியை தெருவில் ஊர்வலத்தில் கைகளிள் கொடுக்கிறார்கள்
எல்லா கொடியையும் ஏற்றிவிட்டு கந்தூரியில் நாங்கள் கொடி ஏற்றினால் பித்அத்து ஷிர்கு முர்கு வழிகேடு என்று சொல்வது சரியா?////

கபுறு தர்கா வணங்கிகள் ஏற்றும் கொடியிட்கும் TNTJ ஏற்றும் கொடியிட்கும் வித்தியாசம் உள்ளது கேளுங்கள்

3/17/2015

யானையைக் கடவுளாக்கிய கப்ரு வணங்கிகள்

யானையைக் கடவுளாக்கிய கப்ரு வணங்கிகள்

கப்ரு வணக்கத்தை கப்ரு ஸியாரத் என்று பெயர் மாற்றம் செய்யும் பரேலவிகள் தங்களுடைய வணக்கத் தலங்களாகிய தர்ஹாக்களில் யானையைக் கட்டி வைத்து தீனி போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் கலர்ஃபுல்லாகக் காட்சி தந்து ஒருவரை ஒருவர் பார்த்து ரசிப்பதற்காவும், சினிமாப் பாட்டுப் பாடி பக்தர்களைக் குஷிப்படுத்தவும், கோயில்களில் சிலைகளுக்காக பாடப்படும் பஜனைகளை தங்களது கோயில்களாகிய தர்ஹாக்களில் பாடுவதற்காவும் இன்னும்  மார்க்கத்திற்கு புறம்பான பல அனாச்சாரங்களை அரங்கேற்றுவதற்காகவும் கந்தூரி விழா என்று ஏற்பாடு செய்வர். 

இதற்குக் கூட்டம் சேர்ப்பதற்காக யானையைத் தெருத் தெருவாக அழைத்து வருவர். இந்த யானையைப் பார்க்கும் போது தான் மக்களுக்கு அவுலியாவின் ஞாபகம் வந்து இவர்களின் வணக்கத் தலங்களாகிய தர்ஹாவில் நடக்கும் லீலைகளில் கலந்து கொள்வார்கள் என்பதற்காவே இவ்வாறு செய்கிறோம் என பரேலவிகள் கூறுகின்றனர். 

நபியவர்கள் இவ்வாறு தான் கப்ரு ஸியாரத் செய்தார்களா? என்றெல்லாம் இவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாது. ஏனென்றால் இவர்கள் பரேலவி மதத்தினர்.

இந்தப் பரேலவி மதத்தினர், யானை தனது தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒரு பக்தனின் மீது சிந்தினால் அவன் பாக்கியம் பெற்றவனாகி விடுவான் என நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த யானை தண்ணீரை உறிஞ்சி அடிப்பதின் மூலமே தர்ஹாக்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மேலும் இந்தப் பரேலவி மதத்தினர் யானை ஊர்வலம் வரும் போது அதன் முதுகிலிருக்கும் கொடிக்களையின் பூக்களைப் பெறுவதையும், தங்கள் குழந்தைகளை அதன் முதுகில் ஏற்றி இறக்குவதையும் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றனர்.இவர்கள் யானையைக் கடவுளாகக் கருவதுவதாலேயே இது போன்ற வணக்கங்களைத் தங்களுடைய யானைக் கடவுளுக்குச் செய்கின்றனர் என்பதை உண்மையான முஸ்லிம்கள் நன்றாக விளங்கியே வைத்துள்ளனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

3/15/2015

இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம்

கப்ரில் கட்டடம் கட்டலாமா?

குகைவாசிகளின் வரலாற்றுத் தொடரைக் கூறும் வசனங்களில் 21 வது வசனமும் ஒன்றாகும். இவ்வசனத்தில் 'தங்கள் காரியத்தில் மிகைத்தவர்கள் இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம்' என்று கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

 இந்த வார்த்தையைத் தான் சமாதி வழிபாட்டை நியாயப் படுத்துவதற்குரிய ஆதாரமாக இவர்கள் கருதுகின்றனர். அவர்கள் நல்லடியார்களாக இருந்ததன் காரணமாகத் தான் அவர்கள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பப் பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான் என்பது இவர்களது வாதம்.

இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
சமாதி வழிபாட்டை நியாயப்படுத்து வதற்குரிய ஆதாரமாக இந்த வசனத்தை இவர்கள் கருதுகின்றனர். அவர்கள் நல்லடியார்களாக இருந்ததன் காரண மாகத் தான் அவர்கள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான் என்பது இவர்களது வாதம்.
அவர்கள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பியதற்கும் அந்த நல்லடியார் களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வழிபாட்டுத் தலம் எழுப்பியோர் வலிமை பெற்றவர்களாக, மிகைத்தவர்களாக இருந்தார்கள் என்று தான் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.
இவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லவர்களா? கெட்டவர் களா? ஏன் இப்படி எழுப்பினார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் தேவை யான விளக்கம் கிடைக்கின்றது.
யூதர்களும், கிறித்தவர்களும் தங்களின் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கியதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான் என்பது நபிமொழி.
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்காவிட்டால் அவர் களது அடக்கத்தலமும் உயர்த்திக் கட்டப்பட்டிருக்கும் என்று வேறு சில அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் பல நூற்களில் பதிவு செய்யப்பட்டதாகும்.
புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் -முஸ்லிம் 1212, 1213, 1214, 1215, 1216
அபூதாவூத் - 3227
நஸயீ - 703, 2046, 2047
முஅத்தா - 414, 1583
தாரமி - 1403
அஹ்மத் - 1884, 7813, 7818, 7822, 7894, 9133, 9849, 10726, 10727, 21667, 21822, 24106, 24557, 24939, 25172, 25958, 26192, 26221, 26363
இப்னு ஹிப்பான் - 2326, 2327, 3182, 6619
நஸயீயின் குப்ரா - 782, 2173, 2174, 7089, 7090, 7091, 7092, 7093
பைஹகீ - 7010, 7011, 11520, 18530
அபூயஃலா - 5844
தப்ரானி (கபீர்) - 393-411, 4907
இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
நல்லடியார்களின் அடக்கத்தலத்தின் மீது வழிபாட்டுத் தலம் எழுப்புவது யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழக்கமாக இருந்ததை இந்த நபிமொழி களிலிருந்து நாம் அறிகின்றோம். அந்த வழக்கப்படி தான் அவர்கள் குகை வாசிகள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பினார்கள்.
சில நடவடிக்கைகள் முந்தைய சமுதாயங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிந்தைய சமுதாயத்திற்குத் தடுக்கப் படுவதுண்டு. அத்தகைய காரியங்களில் இதைச் சேர்க்கவே முடியாது.
முந்தைய காலத்திலும் இது தடை செய்யப்பட்டே இருந்தது. அனுமதிக்கப் பட்டதை அவர்கள் செய்து இருந்தால் சாபத்துக்குரியவர்கள் என்று நபிகள் நாயகம் கூறியிருக்க மாட்டார்கள்.
எனவே குகைவாசிகளான நல்லடி யார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பியவர்கள் இறைவனின் சாபத்துக் குரியவர்களே தவிர நல்லடியார்கள் அல்ல.
சமாதிகளில் கட்டடம் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (முஸ்லிம் 1610, திர்மிதீ 972)

கட்டப்பட்ட சமாதிகளை இடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(முஸ்லிம் 1609, திர்மிதீ 970)

என் அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்காதீர்கள். (அஹ்மத் 7054)
என்றெல்லாம் கடுமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டார்கள். நானே இறைவன்' என்று பிர்அவ்ன் கூறினான். இதை அல்லாஹ்வும் குர்ஆனில் சுட்டிக் காட்டுவதால் நானே இறைவன்' என்று நாமும் கூறலாம் என்று வாதிட முடியாது.
அது போலத் தான் இந்தத் தீயவர்களின் செயலையும் எடுத்துக் கூறுகின்றான். எனவே, கெட்டவர்களின் இந்தச் செயலை ஆதாரமாகக் கொண்டு தர்கா கட்டலாம் என்று வாதிடுவது அறிவீனமாகும்.

3/04/2015

vivatham

வஸீலா தேடுவது ஆளை வைத்தா அமலை வைத்தா? மக்களை வழிகேட்டின் பால் இட்டுச் செல்லும் அப்துல்லாஹ் ஜமாலியுடன் (NTJ ) தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர் விவாதம்.






அல்லாஹ் எங்கே உள்ளான்?
அப்துல்லாஹ் ஜமாலியுடன் (NTJ ) தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர் விவாதம்   பாகம் 1

தன்னை அறிந்தவன் தன் ............

"தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்றார்கள் நபிகள் நாயகம்" என்று சூபி கொள்கையை கொண்டவர்கள் கூறுகிறார்கள். இது "அஹம் பிரம்மாஸ்மி" "நான் கடவுள்" என்று கூறும் பிறமதக் கொள்கை போல் உள்ளது. இப்படி ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதாவது உள்ளதா? தயவுசெய்து விளக்கம் தரவும்.      

பதில்
من عرف نفسه فقد عرف ربه
(மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு) தன்னை அறிந்தவர் தன் இறைவன அறிந்தவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக சில சூஃபியாக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது இட்டுக்கட்டி உள்ளனர்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி கூட ஹதீஸ் நூற்களில் இடம்பெறவில்லை. இந்தக் கருத்தில் பலவீனமான ஹதீஸ் கூட ஹதீஸ் நூற்களில் இல்லை.
முஹ்யித்தீன் இப்னு அரபீ, ஷஃரானி போன்ற வழிகெட்டவர்கள் தங்கள் நூற்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இப்படி ஒரு செய்தியைப் புனைந்து எழுதி வைத்துள்ளனர்.
இதற்கு அறிவிப்பாளர் தொடரையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை கேட்ட நபித்தோழரையோ யாராலும் காட்ட இயலாது. அந்த அளவுக்கு இது பொய்யான தகவல்.

وإن لم يصح من طريق الرواية فقد صح عندنا من طريق الكشف
இதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லாவிட்டாலும் நம்முடைய மெஞ்ஞானத்தின் படி இது சரியான செய்தி தான் என்று மனித ஷைத்தான் இப்னு அரபி கூறியிருக்கிறான். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தெளிவுபடுத்தும் விதமாக பிற்காலத்தில் இமாம் சகானீ, அஜ்லூனி போன்ற அறிஞர்கள் நூற்களைத் தொகுத்துள்ளனர். இது இட்டுக்கட்டப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

المصنوع في معرفة الحديث الموضوع (ص: 189)


349 - حَدِيثُ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ قَالَ ابْنُ تَيْمِيَّةَ مَوْضُوعٌ
المقاصد الحسنة (ص: 657)

1149 - حديث: من عرف نفسه فقد عرف ربه، قال أبو المظفر ابن السمعاني: في الكلام على التحسين والتقبيح العقلي من القواطع أنه لا يعرف مرفوعا، وإنما يحكى عن يحيى بن معاذ الرازي يعني من قوله، وكذا قال النووي: إنه ليس بثابت،

இமாம் இப்னு தைமியா அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். இமாம் நவவீ அவர்களும் இப்படி ஒரு செய்தி இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.
இதன் கருத்தைக் கவனித்தால் இது மிகப்பெரிய உளறல் என்பதை அறியலாம்.

தன்னை அறிந்தவர் அல்லாஹ்வை அறிவார் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளான். மனிதனுக்கு அடுத்தவனைப் பற்றி தெரியாவிட்டாலும் தன்னை அறியாத எந்த மனிதனும் இருக்க மாட்டான். அப்படி ஒருவன் இருப்பான் என்றால் அவன் புத்தி சரியில்லாத பைத்தியமாகவே இருக்க வேண்டும்.

தனது நாட்டம் தேவை பலவீனம் பலம் ஆகிய விசயங்களை அவனவன் அறிந்தவனாகவே இருக்கின்றான். என்றாலும் அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்கவில்லை.

தன்னை அறிந்தால் அல்லாஹ்வை அறியலாம் என்றால் அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக குர்ஆன் ஏன் வர வேண்டும்? அல்லாஹ்வைப் பற்றி சரியான கருத்தை மக்களுக்கு புரிய வைப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் வர வேண்டும் ?

குர்ஆனும் தேவையில்லை. நபியும் தேவையில்லை. நாமாக சுயமாகவே அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக அறிய முடியும் என்று இதன் மூலம் இந்த சூபியாக்கள் கூற வருகின்றனர். குர்ஆனையும் நபிவழியையும் ஓரங்கட்டுவதற்காகவே இப்படி ஒரு செய்தியை இட்டுக்கட்டியுள்ளனர்.

மேலும் அனல் ஹக் நான் தான் இறைவன் என்ற கேடுகேட்ட சிந்தாந்தத்தை கூறி காபிராகியவர்கள் இந்த சூபியாக்கள். மனிதன் கடவுளாக முடியும் என்பது இவர்களின் கொள்கை.

தன்னை அறிந்தால் இறைவனை அறியலாம் என்ற போலி தத்துவத்தின் மூலம் இந்த கேடுகெட்ட கொள்கையை சமுதாயத்தில் புகுத்த நினைக்கின்றனர்.

உன்னைப் பற்றி அறிந்தால் இறைவனை அறியலாம். ஏனென்றால் இறைவன் உனக்குள் இருக்கின்றான். நீயே இறைவனாக இருக்கும் போது வேறு இறைவனை எதற்கு தேட வேண்டும்? என்ற நச்சுக்கருத்தையும் இந்த வாசகம் உள்ளடக்கியுள்ளது.

அல்லாஹ்விடமிருந்து நேரடியாக கஷ்பு என்ற ஞானத்தின் மூலம் எங்களுக்கு இந்த உண்மை புலப்பட்டது என்றும் இந்த சூபியாக்கள் உளறியுள்ளனர்.

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் இந்த சூபியாக்கள் விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி கூறவில்லை தான் ஆனால் இதன் கருத்து சரியானது தான் என்று சிலர் குட்டுக் கொடுத்துள்ளனர். அதாவது தான் படைக்கப்பட்டவன் என்று ஒருவன் அறிந்து கொண்டால் தன்னைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து கொள்வான் என்பது போன்ற விளக்கங்களைக் கொடுத்துள்ளனர்.

இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதைப் பற்றி இது பேசவில்லை, ஒரு எறும்பு படைக்கப்பட்டது என்று அறிந்து கொண்டாலும் படைத்தவன் இருக்கிறான் என்று அறிய முடியும்.

மேலும் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இன்னும் இறைவனை அறியவில்லை. அவர்கள் தன்னை அறிந்து கொண்டால் தான் இறைவனை அறிய முடியும் என்பது தான் இதன் கருத்தாகும். அதாவது மனிதனே இறைவனாக இருப்பதால் அதை அறிந்து கொண்டால் அப்போது இறைவனை அறிந்து கொள்ளலாம் என்ற அத்வைதக் கொள்கையை பரப்பவே இது இடுக்கட்டப்பட்ட்து என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 நன்றி : onlinepj.com