"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

3/15/2015

இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம்

கப்ரில் கட்டடம் கட்டலாமா?

குகைவாசிகளின் வரலாற்றுத் தொடரைக் கூறும் வசனங்களில் 21 வது வசனமும் ஒன்றாகும். இவ்வசனத்தில் 'தங்கள் காரியத்தில் மிகைத்தவர்கள் இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம்' என்று கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

 இந்த வார்த்தையைத் தான் சமாதி வழிபாட்டை நியாயப் படுத்துவதற்குரிய ஆதாரமாக இவர்கள் கருதுகின்றனர். அவர்கள் நல்லடியார்களாக இருந்ததன் காரணமாகத் தான் அவர்கள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பப் பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான் என்பது இவர்களது வாதம்.

இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
சமாதி வழிபாட்டை நியாயப்படுத்து வதற்குரிய ஆதாரமாக இந்த வசனத்தை இவர்கள் கருதுகின்றனர். அவர்கள் நல்லடியார்களாக இருந்ததன் காரண மாகத் தான் அவர்கள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான் என்பது இவர்களது வாதம்.
அவர்கள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பியதற்கும் அந்த நல்லடியார் களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வழிபாட்டுத் தலம் எழுப்பியோர் வலிமை பெற்றவர்களாக, மிகைத்தவர்களாக இருந்தார்கள் என்று தான் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.
இவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லவர்களா? கெட்டவர் களா? ஏன் இப்படி எழுப்பினார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் தேவை யான விளக்கம் கிடைக்கின்றது.
யூதர்களும், கிறித்தவர்களும் தங்களின் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கியதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான் என்பது நபிமொழி.
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்காவிட்டால் அவர் களது அடக்கத்தலமும் உயர்த்திக் கட்டப்பட்டிருக்கும் என்று வேறு சில அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் பல நூற்களில் பதிவு செய்யப்பட்டதாகும்.
புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் -முஸ்லிம் 1212, 1213, 1214, 1215, 1216
அபூதாவூத் - 3227
நஸயீ - 703, 2046, 2047
முஅத்தா - 414, 1583
தாரமி - 1403
அஹ்மத் - 1884, 7813, 7818, 7822, 7894, 9133, 9849, 10726, 10727, 21667, 21822, 24106, 24557, 24939, 25172, 25958, 26192, 26221, 26363
இப்னு ஹிப்பான் - 2326, 2327, 3182, 6619
நஸயீயின் குப்ரா - 782, 2173, 2174, 7089, 7090, 7091, 7092, 7093
பைஹகீ - 7010, 7011, 11520, 18530
அபூயஃலா - 5844
தப்ரானி (கபீர்) - 393-411, 4907
இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
நல்லடியார்களின் அடக்கத்தலத்தின் மீது வழிபாட்டுத் தலம் எழுப்புவது யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழக்கமாக இருந்ததை இந்த நபிமொழி களிலிருந்து நாம் அறிகின்றோம். அந்த வழக்கப்படி தான் அவர்கள் குகை வாசிகள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பினார்கள்.
சில நடவடிக்கைகள் முந்தைய சமுதாயங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிந்தைய சமுதாயத்திற்குத் தடுக்கப் படுவதுண்டு. அத்தகைய காரியங்களில் இதைச் சேர்க்கவே முடியாது.
முந்தைய காலத்திலும் இது தடை செய்யப்பட்டே இருந்தது. அனுமதிக்கப் பட்டதை அவர்கள் செய்து இருந்தால் சாபத்துக்குரியவர்கள் என்று நபிகள் நாயகம் கூறியிருக்க மாட்டார்கள்.
எனவே குகைவாசிகளான நல்லடி யார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பியவர்கள் இறைவனின் சாபத்துக் குரியவர்களே தவிர நல்லடியார்கள் அல்ல.
சமாதிகளில் கட்டடம் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (முஸ்லிம் 1610, திர்மிதீ 972)

கட்டப்பட்ட சமாதிகளை இடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(முஸ்லிம் 1609, திர்மிதீ 970)

என் அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்காதீர்கள். (அஹ்மத் 7054)
என்றெல்லாம் கடுமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டார்கள். நானே இறைவன்' என்று பிர்அவ்ன் கூறினான். இதை அல்லாஹ்வும் குர்ஆனில் சுட்டிக் காட்டுவதால் நானே இறைவன்' என்று நாமும் கூறலாம் என்று வாதிட முடியாது.
அது போலத் தான் இந்தத் தீயவர்களின் செயலையும் எடுத்துக் கூறுகின்றான். எனவே, கெட்டவர்களின் இந்தச் செயலை ஆதாரமாகக் கொண்டு தர்கா கட்டலாம் என்று வாதிடுவது அறிவீனமாகும்.

3/04/2015

vivatham

வஸீலா தேடுவது ஆளை வைத்தா அமலை வைத்தா? மக்களை வழிகேட்டின் பால் இட்டுச் செல்லும் அப்துல்லாஹ் ஜமாலியுடன் (NTJ ) தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர் விவாதம்.






அல்லாஹ் எங்கே உள்ளான்?
அப்துல்லாஹ் ஜமாலியுடன் (NTJ ) தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர் விவாதம்   பாகம் 1

தன்னை அறிந்தவன் தன் ............

"தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்றார்கள் நபிகள் நாயகம்" என்று சூபி கொள்கையை கொண்டவர்கள் கூறுகிறார்கள். இது "அஹம் பிரம்மாஸ்மி" "நான் கடவுள்" என்று கூறும் பிறமதக் கொள்கை போல் உள்ளது. இப்படி ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதாவது உள்ளதா? தயவுசெய்து விளக்கம் தரவும்.      

பதில்
من عرف نفسه فقد عرف ربه
(மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு) தன்னை அறிந்தவர் தன் இறைவன அறிந்தவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக சில சூஃபியாக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது இட்டுக்கட்டி உள்ளனர்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி கூட ஹதீஸ் நூற்களில் இடம்பெறவில்லை. இந்தக் கருத்தில் பலவீனமான ஹதீஸ் கூட ஹதீஸ் நூற்களில் இல்லை.
முஹ்யித்தீன் இப்னு அரபீ, ஷஃரானி போன்ற வழிகெட்டவர்கள் தங்கள் நூற்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இப்படி ஒரு செய்தியைப் புனைந்து எழுதி வைத்துள்ளனர்.
இதற்கு அறிவிப்பாளர் தொடரையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை கேட்ட நபித்தோழரையோ யாராலும் காட்ட இயலாது. அந்த அளவுக்கு இது பொய்யான தகவல்.

وإن لم يصح من طريق الرواية فقد صح عندنا من طريق الكشف
இதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லாவிட்டாலும் நம்முடைய மெஞ்ஞானத்தின் படி இது சரியான செய்தி தான் என்று மனித ஷைத்தான் இப்னு அரபி கூறியிருக்கிறான். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தெளிவுபடுத்தும் விதமாக பிற்காலத்தில் இமாம் சகானீ, அஜ்லூனி போன்ற அறிஞர்கள் நூற்களைத் தொகுத்துள்ளனர். இது இட்டுக்கட்டப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

المصنوع في معرفة الحديث الموضوع (ص: 189)


349 - حَدِيثُ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ قَالَ ابْنُ تَيْمِيَّةَ مَوْضُوعٌ
المقاصد الحسنة (ص: 657)

1149 - حديث: من عرف نفسه فقد عرف ربه، قال أبو المظفر ابن السمعاني: في الكلام على التحسين والتقبيح العقلي من القواطع أنه لا يعرف مرفوعا، وإنما يحكى عن يحيى بن معاذ الرازي يعني من قوله، وكذا قال النووي: إنه ليس بثابت،

இமாம் இப்னு தைமியா அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். இமாம் நவவீ அவர்களும் இப்படி ஒரு செய்தி இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.
இதன் கருத்தைக் கவனித்தால் இது மிகப்பெரிய உளறல் என்பதை அறியலாம்.

தன்னை அறிந்தவர் அல்லாஹ்வை அறிவார் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளான். மனிதனுக்கு அடுத்தவனைப் பற்றி தெரியாவிட்டாலும் தன்னை அறியாத எந்த மனிதனும் இருக்க மாட்டான். அப்படி ஒருவன் இருப்பான் என்றால் அவன் புத்தி சரியில்லாத பைத்தியமாகவே இருக்க வேண்டும்.

தனது நாட்டம் தேவை பலவீனம் பலம் ஆகிய விசயங்களை அவனவன் அறிந்தவனாகவே இருக்கின்றான். என்றாலும் அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்கவில்லை.

தன்னை அறிந்தால் அல்லாஹ்வை அறியலாம் என்றால் அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக குர்ஆன் ஏன் வர வேண்டும்? அல்லாஹ்வைப் பற்றி சரியான கருத்தை மக்களுக்கு புரிய வைப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் வர வேண்டும் ?

குர்ஆனும் தேவையில்லை. நபியும் தேவையில்லை. நாமாக சுயமாகவே அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக அறிய முடியும் என்று இதன் மூலம் இந்த சூபியாக்கள் கூற வருகின்றனர். குர்ஆனையும் நபிவழியையும் ஓரங்கட்டுவதற்காகவே இப்படி ஒரு செய்தியை இட்டுக்கட்டியுள்ளனர்.

மேலும் அனல் ஹக் நான் தான் இறைவன் என்ற கேடுகேட்ட சிந்தாந்தத்தை கூறி காபிராகியவர்கள் இந்த சூபியாக்கள். மனிதன் கடவுளாக முடியும் என்பது இவர்களின் கொள்கை.

தன்னை அறிந்தால் இறைவனை அறியலாம் என்ற போலி தத்துவத்தின் மூலம் இந்த கேடுகெட்ட கொள்கையை சமுதாயத்தில் புகுத்த நினைக்கின்றனர்.

உன்னைப் பற்றி அறிந்தால் இறைவனை அறியலாம். ஏனென்றால் இறைவன் உனக்குள் இருக்கின்றான். நீயே இறைவனாக இருக்கும் போது வேறு இறைவனை எதற்கு தேட வேண்டும்? என்ற நச்சுக்கருத்தையும் இந்த வாசகம் உள்ளடக்கியுள்ளது.

அல்லாஹ்விடமிருந்து நேரடியாக கஷ்பு என்ற ஞானத்தின் மூலம் எங்களுக்கு இந்த உண்மை புலப்பட்டது என்றும் இந்த சூபியாக்கள் உளறியுள்ளனர்.

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் இந்த சூபியாக்கள் விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி கூறவில்லை தான் ஆனால் இதன் கருத்து சரியானது தான் என்று சிலர் குட்டுக் கொடுத்துள்ளனர். அதாவது தான் படைக்கப்பட்டவன் என்று ஒருவன் அறிந்து கொண்டால் தன்னைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து கொள்வான் என்பது போன்ற விளக்கங்களைக் கொடுத்துள்ளனர்.

இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதைப் பற்றி இது பேசவில்லை, ஒரு எறும்பு படைக்கப்பட்டது என்று அறிந்து கொண்டாலும் படைத்தவன் இருக்கிறான் என்று அறிய முடியும்.

மேலும் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இன்னும் இறைவனை அறியவில்லை. அவர்கள் தன்னை அறிந்து கொண்டால் தான் இறைவனை அறிய முடியும் என்பது தான் இதன் கருத்தாகும். அதாவது மனிதனே இறைவனாக இருப்பதால் அதை அறிந்து கொண்டால் அப்போது இறைவனை அறிந்து கொள்ளலாம் என்ற அத்வைதக் கொள்கையை பரப்பவே இது இடுக்கட்டப்பட்ட்து என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 நன்றி : onlinepj.com