"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

7/22/2015

அபூஜஹீலின் வாரிசுகள் நாங்கள் ..!!

இஸ்லாம் தடைசெய்துள்ள பெரும்பாவமான வட்டித்தொழில் செய்யும் இஸ்லாமியர்களை தவறு என்று தட்டுக்கேட்க மாட்டோம் ..காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

மஹர் கொடுத்து திருமணம் செய்ய சொல்லும் இறைவனின் போதனையை தூக்கி எறிந்துவிட்டு வரதட்சணை என்றபெயரில் கைக்கூலி வாங்கும் திருமணத்திற்கு சென்று பிரியாணிக்காக பிராத்தனையும் செய்வோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

நபிகள் நாயகம் சுன்னத் என்று என்று வலியுறுத்தியுள்ள தாடியை மழித்துக்கொண்டு வரும் இளைஞர்களை பார்த்தால் எங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

தட்டு தர்கா தாயத்து தரீக்கா என்று அனைத்து இணைவைப்பு காரியங்களையும் நாங்களும் செய்வோம் பிறரையும் செய்ய தூண்டுவோம் .... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

இறைவனிடமிருந்து வந்த வஹிச்செய்தி மட்டுமே இஸ்லாம் என்றாலும் வஹி மட்டுமே இஸ்லாமா ? இல்லை இல்லை கண்ட கண்ட கழிசடைகளின் வழி காட்டுதலும் இஸ்லாமே என்போம் ... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒற்றுமை ஏற்படுத்தலாம் வாருங்கள் என்றால் இல்லை இல்லை நாங்கள் ஷாஃபி ஹனஃபி என்று பிரிந்தே கிடப்போம் என்று நெஞ்சுயர்த்தி சொல்வோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

குப்பைகளை கூட நபி மொழி என்று ஏற்று செயல்படுவோம் ஆதாரப்பூர்வமான நபிமொழி என்று நீங்கள் ஆதாரம் காட்டிலும் அதை குப்பை என்றே தூக்கி எறிவோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

உலகமக்களுக்கான பொது மறை என்று குர்ஆன் பிரகடனம் செய்தாலும் மாற்று மதத்தவர் குர்ஆனை தொட அனுமதி இல்லை என மறுத்து இறைவனுக்கே மாறு செய்வோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

பள்ளிவாசலுக்கு வரும் பெண்களை தடை செய்யாதீர்கள் என நபிகள் நாயகம் சொன்னதற்கு மாறாக எந்த பள்ளிகளுக்கும் பெண்கள் வரக்கூடாது என சட்டம் போடுவோம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

இதற்கு மாற்றமாக ..

வட்டி வாங்குவது பெரும்பாவம் அதில் வீழ்ந்து விடாதீர்கள் என்று அவர்களை நன்மையின் பால் அழைப்பவர்களை காஃபிர் என ஃபத்வா கொடுப்போம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

வரதட்சணை ஒரு சமூக்கேடு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சொல்லி மஹர் கொடுத்து திருமணம் செய்பவர்களை காஃபிர் என ஃபத்வா கொடுப்போம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

தாடியை மழிக்காதீர்கள் இளைஞர்களே ..தாடி என்பது நபிகள் நாயகத்தின் அடையாளம் என்று சொல்லி தாடி வைத்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்குனால் காஃபிர் என ஃபத்வா கொடுப்போம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

நரகப்படுகுழியின் விளிம்பில் இருந்த சமுதாயத்தை தர்கா தட்டு தாயத்து தரீக்கா இதெல்லாம் இணைவைப்பு காரியங்கள் என்பதை காரண காரியத்தோடு விளக்கி நேர் வழி காட்டயவர்களை காஃபிர் என ஃபத்வா கொடுப்போம் .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

மக்கள் மறுமையில் வெற்றி பெற ஒரே வழி இறைவனின் வஹி மட்டுமே என்று உண்மையை உரக்கச்சொன்னால் காஃபிர் என கொடுப்போம் ஃபத்வா .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

குர்ஆன் ஹதீஸ் மட்டுமே ஒற்றுமைக்கான வழி என்று பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை ஒற்றுமை படுத்த முயன்றால் கொடுப்போம் காஃபிர் என ஃபத்வா ... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

நபிமொழிகள் என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பின்பற்றாதீர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டுமே பின்பற்றுங்கள் என சொன்னால் தருவோம் காஃபிர் ஃபத்வா .. காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

உலகப்பொதுமறையாம் குர்ஆனை இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று எடுத்துச்சொல்லி மாற்று மதத்தவர்களுக்கு கொடுத்து ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தில் இணைத்தால் கொடுப்போம் ஃபத்வா காஃபிர் என்று ... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

ஒரு குடும்பத்தில் பெண் மார்க்கத்தை தெரிந்து கொண்டால் அந்த குடும்பமே நேர் வழிக்கு வரலாம் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் வழியில் பெண்களை பள்ளியில் அனுமதித்தால் தருவோம் காஃபிர் என்ற ஃபத்வா ... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!

இப்படிக்கு ..

தமிழ் மாநில ஜமாஅத்துல் உல(மா)க்கள் சபை ..
இப்படி நாங்கள் பெயர் வைத்துக்கொள்ள .... காரணம் அபூஜஹ்லின் வாரிசுகள் நாங்கள் ..!!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்