"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)
Showing posts with label வஸீலா. Show all posts
Showing posts with label வஸீலா. Show all posts

12/27/2019

ஷிர்க் என்றால் என்ன?

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படையைக் கொள்கையாகும்.


பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் ஷிர்க் எனும் இணை கற்பித்தல் ஆகும்.
வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதோருக்குச் செய்தால் அது எந்த வடிவில் இருந்தாலும் அது 'ஷிர்க் ' என்று தான் கூறப்படும். உதாரணமாக பிரார்த்தனை செய்தல் என்பது ஓர் வணக்கமாகும்.

நம் வாழ்வில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும் இன்ன பிற தேவைகளையும் அல்லாஹ்விடம் மாத்திரம் தான் சொல்லி முறையிட வேண்டும். அல்லாஹ்விடம் முறையிடாமல் அல்லாஹ்வின் படைப்பாகிய மகான்களிடமோ அல்லது தர்ஹாக்களில் சென்று முறையிட்டாலோ அதற்கு 'ஷிர்க் ' என்று சொல்லப்படும்.

நேர்ச்சை செய்தல் ,
அறுத்துப் பலியிடுதல்,
சத்தியம் செய்தல்,
பாதுகாப்பு கோருதல்,
சிரம்பணிதல்,
போன்றவைகள் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும். இவைகளை அல்லாஹ் அல்லாத
அவ்லியா,
மகான்,
பெரியார்,
விக்கிரக சிலை,
கப்ரு,
கல் ,
மண்,
மரம் போன்றவற்றிற்கு யாராவது செய்தால் அதனை 'ஷிர்க்' என்று இஸ்லாம் சொல்கின்றது.
நம்முடைய சமூகத்தில் அவ்லியாக்களின் அடக்கஸ்தலத்திற்குச் சென்று , நேர்ச்சைகள் செய்து தமது தேவைகளை முறையிடுவோர் பெருந்திரளாக உள்ளதை மறுக்க முடியாது.

'ஷிர்க்' என்ற அரபி வார்த்தைக்கு 'இணை கற்பித்தல்' என்று பொருள். தமது கைகளால் சிலைகளை செய்து விட்டு பின்னர் அதனையே கடவுளாக வணங்கும் பிறமத மக்களின் கலாச்சாரத்தைத் தான் பலர் 'ஷிர்க்' என்று நம்புகிறார்கள். இதனை முஸ்லிம்கள் யாரும் செய்வதில்லை. பின்னர் எதற்காக, முஸ்லிம்கள் மத்தியில் 'ஷிர்க் ஒழிய வேண்டும்' எனப் பிரசாரம் செய்கின்றீர்கள் என பலரும் கேள்வி எழுப்பலாம். 'சிலைகளை வணங்குவது மாத்திரம் தான் ஷிர்க்' என்று நம்மில் அதிகமானோர் புரிந்து வைத்திருப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
(நபியே)நீர் இணைகற்பித்தாலும் உம்முடைய நல்லறங்கள் அழிந்து விடும்.
திருக்குர்ஆன்-39:66

5/16/2014

நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும்

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே....!!

'' இறைவா உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் ஃபாதிமா பின்த் அவர்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்குவாயாக என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்த ஹதீஸ் தப்ரானியில் உள்ளதாகவும், பெரியார்களின் பொருட்டால் வசீலா தேடலாம் என்ப்தற்கு இது ஆதாரம் என்று சொகிறார்களே அது உண்மையா ....??
நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ் இது தான்
المعجم الكبير (24/ 351)
871 - حدثنا أحمد بن حماد بن زغبة ثنا روح بن صلاح ثنا سفيان الثوري عن عاصم الأحول عن أنس بن مالك قال : : لما ماتت فاطمة بنت أسد بن هاشم أم علي بن أبي طالب دخل عليها رسول الله صلى الله عليه و سلم فجلس عند رأسها فقال : رحمك الله يا أمي كنت أمي بعد أمي وتشبعيني وتعرين وتكسيني وتمنعين نفسك طيباوتطعميني تريدين بذلك وجه الله والدار الآخرة ثم أمر أن تغسل ثلاثا فلما بلغ الماء الذي فيه الكافور سكبه رسول الله صلى الله عليه و سلم بيده ثم خلع رسول الله صلى الله عليه و سلم قميصه فألبسها إياه وكفنها ببرد فوقه ثم دعا رسول الله صلى الله عليه و سلم أسامة بن زيد وأبا أيوب الأنصاري وعمر بن الخطاب وغلاما أسود يحفرون فحفروا قبرها فلما بلغوا اللحد حفره رسول الله صلى الله عليه و سلم بيده وأخرج ترابه بيده فلما فرغ دخل رسول الله صلى الله عليه و سلم فاضطجع فيه ثم قال : الله الذي يحيي ويميت وهو حي لايموت أغفر لأمي فاطمة بنت أسد ولقنها حجتها ووسع عليها مدخلها بحق نبيك والأنبياء الذين من قبلي فإنك أرحم الراحمين وكبر عليها أربعا وادخلوها اللحد هو والعباس وأبو بكر الصديق رضي الله عنهم

இது தான் நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ். இந்த ஹதீஸ்
தப்ரானியில் மட்டுமின்றி அபூ நயீம் அவர்களின் ஹில்யதுல் அவ்லியா என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ரூஹ் பின் ஸலாஹ் روح بن صلاح என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
இவரைப் பற்றி இப்னு ஹிப்பான் நம்பகமானவர் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இப்னு ஹிப்பானைப் பொருத்தவரை யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று சொல்லக் கூடியவர் என்பதால் இவரது நற்சான்றை அறிஞர்கள் ஏற்பதில்லை.
இப்னு ஹிப்பான் விமர்சனம் பற்றி அறிய
அது போல் ஹாகிம் அவர்களும் இவரை நம்பக்மானவர் என்று சொல்லி இருக்கிறார். நம்பகமானவர் என்று முடிவு செய்வதில் ஹாகிம் கவனமில்லாமல் முடிவு செய்பவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஹாஃபிழ் ஹைசமீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
مجمع الزوائد (9/ 414)
( رواه الطبراني في الكبير والأوسط وفيه روح بن صلاح وثقه ابن حبان والحاكم وفيه ضعف وبقية رجاله رجال الصحيح )

இதில் இடம்பெறும் ரூஹ் பின் ஸலாஹ் என்பவர் பலவீனமானவராக இருந்தும் இவரை இப்னு ஹிப்பானும் ஹாகிமும் நம்பகமானவர்கள் எனக் கூறியுள்ளனர்.
இப்னு அதீ அவர்கள் இவரை பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர். இவரது இரண்டு ஹதீஸ்களை இப்னு அதீ அவர்கள் பதிவு செய்து விட்டு இவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவற்றில் சிலவற்றில் ஆட்சேபனை உள்ளது என்றும் இப்னு அதீ கூறுகிறார்
لسان الميزان - ابن حجر (2/ 465)
روح بن صلاح المصري يقال له بن سيابة ضعفه بن عدي يكنى أبا الحارث.... .... وقال بن عدي بعد أن أخرج له حديثين له أحاديث كثيرة في بعضها نكرة

நூல் : லிஸானுல் மீஸான்
தாரகுத்னீ அவர்களும் இவரை பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர். ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரைப் பலவீனர் என்று முடிவு செய்துள்ளதாக இப்னு மஃகூலா கூறுகிறார்
لسان الميزان - ابن حجر (2/ 465)
وقال الدارقطني ضعيف في الحديث وقال بن ماكولا ضعفوه

நூல் : லிஸானுல் மீஸான்
இவர் நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு முரனாக பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று இப்னு யூனுஸ் கூறுகிறார்.
لسان الميزان - ابن حجر (2/ 465)
ذكره بن يونس في تاريخ الغرباء فقال من أهل الموصل قدم مصر وحدث بها رويت عنه مناكير

நூல் :லிஸானுல் மிஸான்


நன்றி onlinepj.com

3/07/2014

தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும்

அவுலியாக்களின் கபுருகளை வணங்க கூடாது .
இறந்து போனவர்களிடம் உதவிதேடக்கூடாது என்று நாம் கூறும்போது .........
/// கண்மணி நாயகம் (ஸல்)  அன்னவர்கள் கூறினார்கள்:
தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக்கொள்ளுங்கள்.  முஸ்லிம், மிஷ்காத் 582
/// என்று இந்த ஹதீசை காட்டுவார்கள்,   உண்மையில் இவர்கள் கபுரை வணங்குவதற்கு ஆதாரமாக காட்டுவது ஒரு நீண்ட ஹதீஸின் சிறு பகுதியேயாகும், அந்த நீண்ட ஹதீஸில்  (இறந்து போன) அவுலியாக்களின் கபுர்களை அலங்கரிக்கவோ கட்டவோ அங்கே சென்று தமது தேவைகளை கேட்கவோ பிரார்த்திட்கவோ எந்த ஆதாரமும் இல்லை மாறாக உயிரோடு இருப்பவர்களிடத்தில் எமக்காக அல்லாஹ்விடத்தில் துவா செய்யுங்கள் என்று கூறலாம் அப்படித்தான் சஹாபாக்களும் செய்து இருக்கிறார்கள் 
 இனி அந்த ஹதீஸை முழுமையாக பார்ப்போம்
 
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் "உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?'' என்று கேட்பார்கள். இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, "நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?'' என்று கேட்டார்கள். அதற்கும் உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்திய மிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றிவைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள். அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித் தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "கூஃபாவிற்கு' என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்'' என்று கூறிவிட்டார்கள். அடுத்த ஆண்டில் "கரன்' குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், "மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யமன் வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற் பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்'' என்றார்கள். ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, "எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், "நீர்தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்'' என்றார்கள். "நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்' என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ் அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள். தொடர்ந்து (உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ் அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன். அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல் லாம் "உவைஸ் அவர்களுக்கு இந்தப் போர்வை எப்படிக் கிடைத்தது?'' என்று கேட்பார்கள்.
முஸ்லிம் 4971   Book : 44   உசைர் பின் ஜாபிர் (ரலி

கபுர் வணங்கிகள்  நினைப்பதுபோல  யாரும் அவருக்கு கபுர்கட்டி பச்சை பிடவை போர்த்தி அங்கே பிரார்த்திக்கவில்லை மாறாக   எனக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று உயிரோடுள்ள அவரிடம் கேட்டிருக்கிறார்கள் ,
நல்லோர்களுக்கு தர்கா கட்டலாம் என்றிருந்தால் உவைஸ் (ரஹ் )மரணித்ததன் பின்னால் இவர்களுக்கு பென்னாம்பெரிய தர்காவை கட்டியிருப்பார்கள்.   ஆனால் அக்காலத்தில் தர்கா கட்டியதாகவோ அங்கே போய் தமது தேவைகளை கேட்டார்களோ என்று எந்த தகவலும் நாமறிந்தவரை கிடைக்கவில்லை

 இங்கே இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்  உவைஸ் அல் கர்ணி ரஹ் அவர்கள் 100% நல்லடியார் என்று தெரிந்தும் சஹாபாக்களோ தாபிஈன்களோ  அவரின் கைகால்களை முத்தமிடவில்லை காலில் விழவில்லை  அவரின் எச்சிலை மேனியில் பூசிக்கொள்ளவில்லை  ஆனால் இன்று சிலர் ஷேக் என்று சொல்லக்கூடிய வர்களின் காலில் விழுவதும் அவர்களை முத்தமிடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்

10/27/2013

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?


அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்சாரம் செய்து வருகின்றது.

பரேலவிகள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கையாகும்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்குச் சில ஆதாரங்களைத் தங்களுடைய இதழில் எழுதியிருந்தனர். அதற்கு ஏகத்துவம் இதழ் சரியான சாட்டையடிகளையும் சம்மட்டி அடிகளையும் கொடுத்து வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, இவ்விதழில் வஸீலாவைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம்.

இறந்து போன நபிமார்கள், நல்லடியார்களை வைத்து அல்லாஹ்விடம் வஸீலா தேடலாம் என்பது பரேலவிகளின் நிலைப்பாடு.

முஹம்மது நபியின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை நிறைவேற்று, முஹ்யித்தீனின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை வழங்கு என்று ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பது இவர்களது வாதம்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வஸீலா என்பது ஆட்களை வைத்துத் தேடுவதல்ல. ஒருவர் செய்கின்ற அமல்களை வைத்துத் தான்.

இதைப் பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன் 5:35

இவ்வசனத்தில் "இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்' என்று கூறப்படுகிறது.
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் "வஸீலாவாக' - சாதனமாக உள்ளது என்பர்.

"
வஸீலா என்பது இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்வது'' என்று மார்க்க அறிவு இல்லாத சிலர் கருதுகின்றனர்.

"
நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்'' என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது.

இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் "வஸீலாவை' சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது.
இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே "வஸீலா தேடுங்கள்!' என்பதன் கருத்தாகும்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை "இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்று நேர்மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.

இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில் "நம்பிக்கையாளர்களே' என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். "மகான்களும் வஸீலா தேட வேண்டும்'' என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள்.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும்.

மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் தெளிவாகவே கூறுகிறது.
இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.
அல்குர்ஆன்
17:57வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?  இதன் அடுத்த பகுதியை காண இங்கே கிளிக் செய்யவும்


Article Copied From: www.onlinepj.com ,