"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

8/28/2015

இறுதி நபி இறப்பில்லாதவர்களா?

கப்ரை வணங்கும் பரேலவிகளுக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் தேவ்பந்திகளிலும் வழிகெட்ட பரேலவிகள் அதிகமதிகம் ஊடுறுவியுள்ளனர். அதற்குத் தெளிவான சான்றுதான் "மனாருல் ஹுதா மே 2015'' மாத இதழில் "ரவ்ளா கஅபாவை விட புனிதமானது'' என்றும், நபியவர்கள் மரணிக்க வில்லை. அவர்கள் மண்ணறையில் உயிரோடு தான் உள்ளார்கள் என்றும் எழுதியுள்ளனர். இது மிகப்பெரும் வழிகேடும், நிரந்தர நரகத்தில் தள்ளும் இணைவைப்புக் கொள்கையுமாகும்.
"நபியவர்களின் மண்ணறை கஅபாவை விடப் புனிதமானது'' என்ற வழிகெட்ட கருத்திற்குரிய தெளிவான மறுப்பை ஜூன் 2015 ஏகத்துவம் மாத இதழில் நாம் தெளிவு படுத்தியிருந்தோம்.
"நபியவர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் கப்ரில் உயிரோடுதான் உள்ளார்கள்'' என்ற இணைவைப்புக் கொள்கைக்கு எதிரான நபிவழிச் சான்றுகளை நாம் இந்த இதழில் விரிவாகக் காண உள்ளோம்.

நபியவர்கள் மரணிக்கவில்லை என்ற வழிகெட்ட கொள்கையைத் திணிப்பதற்காக மனாருல் ஹுதா மாத இதழ் பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், தவறான வாதங்களையும் முன்வைத்துள்ளது. சில சரியான ஹதீஸ்களின் கருத்தைத் திரித்துக் கூறியுள்ளனர்.
அவர்கள் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்குரிய பதில்களைக் காண்பதற்கு முன்னால் நம் உயிரினும் மேலான உத்தம நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்குரிய சான்றையும், அவர்கள் கியாமத் நாளில் தான் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள் என்பதற்குரிய சான்றுகளையும் காண்போம்.
நபியும் மரணிப்பவரே! திருக்குர்ஆன் பிரகடனம் 
(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள்.  (அல்குர்ஆன் 39:30)
இந்த இறைவசனம் நபியவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நோக்கிப் பேசுகின்ற இறைவசனம் ஆகும்.
இவ்வுலகில் படைத்த அனைத்து மனிதர்களும் எவ்வாறு மரணத்தைத் தழுவக்கூடியவர்களோ அது போன்றே முஹம்மது (ஸல்) அவர்களும் மரணத்தைத் தழுவக்கூடியவர்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
மரணம் என்பதில் பிற மனிதர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இறைத்தூதர் இறந்தாலும் இஸ்லாம் நிலைத்திருக்கும்
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)
உஹது யுத்தக் களத்தில் நபியவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது சிலர் இஸ்லாத்தை விட்டே வெளியேற நினைத்தனர். நபியவர்கள் கொல்லப் பட்ட பிறகு நாம் எதற்காகப் போர் செய்ய வேண்டும் என்று எண்ணினர். அந்த நேரத்தில்தான் அல்லாஹ் மேற்கண்ட இறைவசனத்தை அருளினான்.
முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்தாலும் இஸ்லாம் நிலைத் திருக்கும். எனவே முஹம்மது நபி இறந்து விட்டாலும் நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவீர்களா? அப்படி வெளியேறினால் அது உங்களுக்குத்தான் நஷ்டம் என்பதை நபித்தோழர்களுக்குத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்தியது.
நபியவர்கள் உயிருடன் வாழும் காலகட்டத்திலேயே அவர்கள் மரணிக்கக் கூடியவர்கள் தான் என்பதை இந்த இறைவசனம் நபித்தோழர்களுக்கு முன்னறிவிப்புச் செய்தது.
உண்மையை உணர்த்திய உண்மையாளர் அபூபக்கர்
"எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந் தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.
"(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.'' (39:30)
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான் (3:144)    (நூல்: புகாரி 3668)
மேற்கண்ட வார்த்தைகள் நபியவர்கள் மரணித்த நேரத்தில் உண்மையாளர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறிய அற்புத வார்த்தைகளாகும். திருக்குர்ஆன் போதிக்கும் அற்புத உண்மையை நபியவர்கள் மரணித்த வேளையிலே அன்புத்தோழர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
மற்றொரு முறையிலும் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அபூபக்கர் (ரலி) நயமாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, "தங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பண மாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களைச் சுவைக்கச் செய்ய  மாட்டான்'' என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.  (நூல்: புகாரி 3667)
"நபி (ஸல்) அவர்கள் இறக்க வில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும், கால்களையும் துண்டிப்பார்கள்'' (புகாரி 3667) என்று உமர் (ரலி) அவர்கள் நபி மீது கொண்ட பாசத்தினால் நிலை தவறிப் பேசிய பொழுதான் அபூபக்கர் (ரலி) மேற்கண்ட உண்மையை ஓங்கி உரைத்தார்கள்.
நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பது இணைவைப்புக் கொள்கை என்பதனை இறைத்தூதர் இறந்த நேரத்தில் குகைத்தோழர் ஆற்றிய உரையிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
இறப்பு நெருங்கியதை உணர்த்திய இறைவசனம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக் கொள்வது வழக்கம். ஆகவே, (ஒருநாள்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம், "எங்களுக்கு இப்னு அப்பாஸைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்'' என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவரது (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்'' என்று (என்னைக் குறித்துச்) சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களின் மத்தியில் வைத்து) என்னிடம், "(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் பார்க்கும் போது...'' எனும் (110:1, 2) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், "(இவ்வசனத்தின் வாயிலாக) அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவித்தான்'' என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்து கொண்டதையே நானும் அறிந்து கொண்டேன்'' என்று சொன்னார்கள்  (நூல்: புகாரி 4430)
இறைத்தூதர் இறந்துவிட்டார்கள் என்பதுதான் நபித்தோழர்களின் கொள்கையாக இருந்தது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இறைத் தூதர் இறக்கவில்லை என்று நம்புவது இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை என்பதும் தெளிவாகி விட்டது.
மரணம் நெருங்கிவிட்டதை மகளுக்கு உணர்த்திய இறைத்தூதர்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயில் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப் பதாகத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு அவர்களின் வீட்டாரில் முதலா வதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான் தான்' என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன் என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரி (3625, 3626)
நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியும் மிகத் தெளிவாக உரைக்கின்றது. இவ்வளவு தெளிவான சான்றுகளைக் கண்ட பின்னரும் அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பவர்கள் உண்மையான முஃமின்களாக இருக்க முடியுமா? மக்களே சிந்தித்துப் பாருங்கள்.
மரணம் நெருங்கிவிட்டதை மக்களுக்கு உணர்த்துதல்
நபி (ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் தாம் மரணிக்கப் போகிறோம் என்பதையும் தன்னுடைய இறப்பிற்குப் பிறகு நபித்தோழர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.
உஹுதுப் போர் தியாகிகளுக்குத் தொழுகை நடத்தி விட்டு, தாம் மரணிக்கப் போவதையும் அடுத்த சந்திப்பு மஹ்ஷரில்தான் என்பதையும் நபியவர்கள் தமது தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப் பதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழ வைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (அல்கவ்ஸர்' எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். எனக்கு "பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது "பூமியின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். நூல்: புகாரி (6426)
"எனக்குப் பின்னால்'' என்று நபியவர்கள் கூறியது "அவர்களுடைய இறப்பிற்குப் பின்னால்'' என்பதாகும்.
மேலும் தம்முடைய இறுதி ஹஜ்ஜின் போதும் தாம் விரைவில் மரணித்துவிடக்கூடும்  என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உணர்த்தினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத் துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங் கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) செய்ய மாட்டேனா என்பதை அறியமாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள். நூல்: முஸ்லிம் (2497)
இறக்கப் போவதை உரக்கச் சொன்ன இறைத்தூதர்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில், "இந்த உலகம், அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி தூயோன் அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்தான். அ(ந்த அடியாரான)வர், அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்' என்று சொன்னார்கள்.
(இதைக் கேட்ட) உடன், அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளே, "இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்த போது அவர் அல்லாஹ்விடமிருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழவேண்டும்?' என்று வினவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் அந்த (சுயாதிகாரம் அளிக்கப்பட்ட) அடியாராக இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள். (ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள் என்று கூறிவிட்டு, "தன் நட்பிலும் தனது செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். (என் இறைவனல்லாத வேறு) ஒருவரை சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களேயே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதைவிடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர' என்று சொன்னார்கள். நூல்: புகாரி (466)
இறைச் செய்தியை நிறுத்திய இறைத்தூதரின் இறப்பு
இறைத்தூதர் இறந்து விட்டதால் இனி இறைச் செய்தி (வஹீ) வராதே என்றெண்ணி அருமை ஸஹாபாக்கள் கண்ணீர் வடித்துள்ளனர். 
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், "நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்'' என்று கூறினார்கள்.
அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், "ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட)  அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?'' என்று கேட்டார்கள்.
அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழ வில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)'' என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவரும் அழலாயினர்.  நூல்: முஸ்லிம் (4849)
இறுதித் தூதர் கூறிய இறுதி வார்த்தை
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை என்று நான் நபி (ஸல்) அவர் களிடமிருந்து செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), "அல்லாஹ் அருள்புரிந்துள்ள இறைத் தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்' எனும் (4:69) இறை வாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே, இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப் பட்டது' என்று நான் எண்ணிக் கொண்டேன். நூல்: புகாரி (4435)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்த போது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்) என்று பிரார்த்தித்தார்கள். நூல்: புகாரி (4437)
மரண வேதனையை அனுபவித்த மாநபி
நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக் கொண்டு, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, (இறைவா! சொர்க் கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது நூல்: புகாரி 4449
இறந்து விட்ட இறைத்தூதர்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந் திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரது மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒரு போதும் நான் வருந்துவதில்லை. நூல்: புகாரி 4446
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். நூல்: புகாரி 4466
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  முப்பது ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். நூல்: புகாரி 4467
குளிப்பாட்டிய நபித்தோழர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். "மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை' என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்' என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்கள்: அபூதாவூத் 2733, ஹாகிம்3/59
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த காரணத்தினால் தான் நபித்தோழர்கள் அவர்களுடைய ஜனாஸாவைக் குளிப்பாட்டினார்கள். இறைத்தூதர் மரணிக்காமல் உயிரோடு இருந்திருந்தால் அவர்களுடைய ஜனாஸாவை ஏன் நபித்தோழர்கள் குளிப்பாட்ட வேண்டும்? என்பதை இவர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.
இறுதி நபியவர்கள் இறப்பை எய்திவிட்டார்கள் என்பதைக் கூறும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை இதுவரை பார்த்தோம்.
நபியவர்கள் இறக்கவில்லை என்பதற்கு மாற்றுக்கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கத்தையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

ஆகஸ்ட் ஏகத்துவம் 2015  கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்களின் மத்ஹப்


ஒரு முறை மத்ஹப்வாதிகளுக்கும்
சுன்னத்தை பின்பற்றக்கூடிய ஏகத்துவ வாதிகளுக்கும் மத்தியில் விவாதம்
ஒன்று நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
குறித்த நேரத்தில் மத்ஹப்வாதிகளின்
பெரும் அறிஞர்கள் எல்லாம சங்கமித்துவிட்டனர்
ஆனால் ஏகத்துவகொள்கை
சார்பில் எவரும் வந்திருக்கவில்லை.

கொஞ்சம் தாமதித்து ஒரு இமாம் மாத்திரம் வந்தார்கள். சபையருகில்
வந்ததும் தமது செருப்பை எடுத்து
கமக்கட்டில் வைத்துக்கொண்டார்கள்.
இதைக்கண்ட மத்ஹபை பின்பற்றக்கூடிய அறிஞர்கள் ஏன்
செருப்பை கமக்கட்டில் வைக்கிறீர் என்று
கேட்ட போது..
இமாமவர்கள் கூறினார்கள்
" நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
நபியவர்களுடைய காலத்தில் மத்ஹப்வாதிகள்
செருப்பை திருடும் வழக்கமுள்ளவர்களாக
இருந்தார்கள் அதனால் தான் எனது
செருப்பை கமக்கட்டில் வைத்தேன் என்று"

இதைக்கேட்ட மத்ஹப் அறிஞர்கள் நபியவர்கள்
காலத்தில் "மத்ஹப்கள்" இருக்கவில்லையே
என்றனர்.
உடனே அந்த இமாம் அப்படியானால்
விவாதம் இப்போதே முடிந்து விட்டது
என்று கூறியவாறு " அப்படி நபியவர்கள்
காலத்தில் மத்ஹப்கள் இல்லா விட்டால்
உங்களுடைய மத்ஹப் வழக்கத்தை எங்கிருந்து
கொண்டு வந்தீர்கள்? என கேட்டார்கள்.
(இன்று வரை பதிலில்லை )...

----------------------------------------------------------------------------------------------------------------------------

மத்ஹபுக்கும் இமாமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,  விரிவாக காண இங்கே கிளிக் செய்யவும்

உண்மையாக மத்ஹபுகள் என்ன சொல்லுகிறது., ?  அறிந்து கொள்ள  இங்கே கிளிக் செய்யவும் 

8/26/2015

உளூஇன்றி குர்ஆனைத் தொடலாமா? ஜமாலி சாஹிபின் அறியாமை

கேள்வி
ஒரு இணையதளத்தில் உளூவின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்ற கருத்தில் ஒரு கட்டுரையை ஷேக் அப்துல்லா ஜமாலி வெளியிட்டிருந்தார். அதற்கான சரியான விளக்கத்தை நீங்கள் தர வேண்டும்.
;ரோஷன்

அந்தக் கட்டுரை இதுதான்

உளூஇன்றி குர்ஆனைத் தொடலாமா?

விளக்கவுரை-1

குர்ஆனைத் தொடக்கூடாத நிலைகள்-

குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும்.அதாவது உளூ இல்லதாவர், குளிப்பு கடமையானவர், மாதவிடாய் பெண்கள், மற்றும் பிள்ளைப் பேறு உதிரபோக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம் குர்ஆனைத் தொடக்கூடாது.

இவ்வாறு கூறிய சஹாபா பெருமக்கள்-

1. அலி ரலியல்லாஹு அன்ஹு

2. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு

3. சஃது இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு

4. அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

5 சயீது இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு

6. சல்மானுல் ஃபாரிஸீ ரலியல்லாஹு அன்ஹு

இதே கருத்தை கூறிய தாபிஈன்கள்-

1. அதாவு இப்னு அபீ ரபாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

 2. இப்னு ஷிஹாப் ஜுஹ்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

3. ஹஸன் பசரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

4. தாவூஸ் இப்னு கய்சான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

5. ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் இப்னி உமர்  ரஹ்மத்துல்லாஹி அலைஹி

6. நக்யீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

7. இப்னு முசய்யப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

8. உர்வா இப்னு ஜீபைர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

9. காஸிம் இப்னு முஹம்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

10.காரிஜா இப்னு ஜைத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

11. அபூபக்கர் இப்னு அப்திர்ரஹ்மான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

12. சுலைமான் இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

13.உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (1*)இமாம்கள் :

ஹனபீ(2*), மாலிகீ(3*), ஷாபிஈ(4*),ஹன்பலீ(5*)

*1 இமாம்பைஹகீ அவர்களுக்குரிய மஃரிஃபதுஸ்ஸூனனீ வல் ஆஃதார்(1/185)

* இமாம் பைஹீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ரா (1/88)

இப்னுல்கய்யீம் அவர்களுக்குரிய இஃலாமுல் மூகியீன்(1/23)

*2 . ஹிதாயா (1/31) மஜ்மவுல் அன்ஹுர் (1/25)

அல்பஹ்ருர் ராயிக் (1/211)

*3 . மஊனா (1/160) அக்துல் ஜவாஹிர்(1/62)

*4 . முஹஃத்தப் (1/32) ரவ்ழதுத்தாலிபீன் (1/190)

முங்னில் முஹ்தாஜ் (1/36)

*5. முக்னிஃ (1/56) முன்தஹல் இராதாத் (1/27)

அர்ரவ்ழுல் முரப்பஃ (1/26)

ஆகிய நான்கு மத்ஹபுகளைச் சார்ந்த போற்றுதலுக்குரிய இமாம்களும்இக்கருத்தையே வலியுறுத்தியுள்ளார்கள்.

பரிசுத்தமான்வார்கள் தான் குர்ஆனைத் தொடவேண்டுமென்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் மூன்று

1.இறைமறை வேதம் அல்குர்ஆன்

2.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளான ஹதீஃத்

3.நபித் தோழ்ர்களின் ஏகோபித்த முடிவான இஜ்மாஃ

குர்ஆன்:

இறைவன் கூறினான் :

لايمسه الا الـمطهرون - الواقعة : 79

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 56-79)

இச்செய்தியின் மூலம் இறைவன் குர்ஆனின் மாண்பை வெளிப்படுத்துகிறான்.தூய்மையானவர்கள் தான் என்று கூறி ஓரு வரைமுறையை இறைவன் விதித்துவிட்டதால் மற்றவர்கள் குர்ஆனைத் தொடகூடாது என்ற அழுத்தமான அர்த்தம் இவ்வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.
 நூல் - ஃதகீரா (1-238) ஆசிரியர்- கர்ராஃபீ

மனிதர்களில் தூய்மையானவர்கள் என்பதன் பொருள் :

* ஷிர்க் எனும் இணைவைப்பு, குஃப்ர் எனும் இறைமறுப்பு இவ்விரண்டை விட்டும் நீங்கி உளத்தூய்மையுடன் இருப்போர்.

 * புலன்களுக்குத் தெரிகின்ற நஜீஸ் எனும் அசுத்ததை விட்டும் உடல் தூய்மையாக இருப்போர்.

* ஹதஃத் எனும் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கைவிட்டும் நீங்கிஇருப்போர்.

மேற்கண்ட வசனத்திலுள்ள வாசகம் வெளித்தோற்றத்தில் செய்தி வடிவில் அமைந்திருந்தாலும் கட்டளை வாக்கியமாகவே இங்கே கருதப்படும்.

நூல்கள் - தஃப்ஸீர் பஙவீ (5-301) தஃப்ஸீர் இப்னு கஃதீர் 4-299)

ஹதீஃத்

1-  
 عن حكيم بن حزام رضي الله عنه قال : لـما بعثني رسول الله صلى الله عليه وسلم الى اليمن قال : لاتمس القرآن الا وانت طاهر

رواه الحاكم فى المسدرك وقال : صحيح الاسناد ووافقه الذهبيز ورواه الدار قطني في سننه والطبراني فى الـمعجم الكبير

1. ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொடவேண்டும்.
நூற்கள்: ஹாகிம்- எண்: 6066, தாரகுத்னீ - எண்: 386, தப்ரானி(கபீர்)- எண்:3067

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசை நம்பகத்தன்மை வாய்ந்ததென்று இமாம் ஹாகிம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் தொடர் அழகியதென்று இமாம் ஹாகிம் கூறுகின்ற கருத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி தனது தல்கீஸ் ஹபீர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

தல்கீஸ் ஹபீர் 1-131

2-
 عن عبد الله بن عمر رضي الله عنه قال : قال النبي صلى الله عليه وسلم : لايمس القرآن الا طاهر

رواه الدارقطني في سننه والطبراني فى الكبير والصغير والبيهقي فى السنن الكبرى

இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்.  பரிசுத்தமானவர் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.

 அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூற்கள்: தாரகுத்னீ - எண்: 383, பைஹகீ/377 தப்ரானி (கபீர்)- எண்:13049, தப்ரானி(ஸஙீர்)- எண்:1160

இந்த ஹதீதின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்.
நூல்; மஜ்மவு ஜவாயித் 1-276

3 -
 عن عثمان بن ابى العاص قال : وفدنا على رسول الله صلى الله عليه وسلم فوجدوني افضلهم اخذا للقرآن وقد فضلتهم بسورة البقرة فقال النبي صلى الله عليه وسلم : قد امرتك على اصحابك وانت اصغرهم ولا تمس القرآن الا وانت طاهر (رواه الطبراني فى الكبير)

உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்;

நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்தோம்.எங்களில் குர்ஆனை நன்கு ஓதக்கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும் போது தான் குர்ஆனைத் தொடவேண்டும்.   நூல்: தப்ரானி (கபீர்)- எண்: 8255

இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற இஸ்மாயில் இப்னு ராஃபிஃ என்பவர் பலவீனமானவர் என யஹ்யா இப்னு மயீன் தெரிவித்தாலும் இமாம் புகாரி அவர்கள் அவரை நம்பகமானவர் என உரைக்கிறார்கள்.
நூல்: மஜ்மவு ஜவாயித் 1-277

4
عن عبد الله بن ابي بكر بن محمد بن عمرو بن حزم عن ابيه عن جده قال: كان في كتاب النبي صلى الله عليه وسلم لعمرو بن حزم : لايمس القرآن الا على طهر. رواه مالك وابن حبان والدارمي والبيهقي والدارقطني

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு இருந்தது:

‘தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொடவேண்டும்.’

அறிவிப்பாளர்- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

நூற்கள்: முஅத்தா-எண்:466, தாரமீ- எண்:2195, பைஹகீ- எண்:376,

இமாம் தாரகுத்னீ அவர்களின் கூற்று:-
இதன் அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மையுள்ளவர்கள்.

இமாம் பஙவீ அவர்களின் கூற்று:-

قال البغوي سمعت احمد بن حنبل وسئل عن هذا الحديث فقال : ارجو ان يكون صحيحا وقال ايضا : لا اشك ان رسول الله صلى الله عليه وسلم كتبه

இந்த ஹதீஃதின் நிலைபற்றி இமாம் அஹமத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வினவப்பட்ட போது, இது ஆதாரபூர்வமானது என்றே கருதுகிறேன் என பதிலளித்த இமாம் அவர்கள் மேலும் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை எழுதினார்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

நூற்கள்- திப்யான்1-409 , இர்வாவுல் ஙலீல்1-161

இமாம் யஃகூப் இப்னு சுப்யான் அவர்களின் கூற்று:-

قال يعقوب بن سفيان : لا اعلم كتابا اصح من هذا الكتاب فان اصحاب رسول الله صلى الله عليه وسلم والتابعين يرجعون اليه ويدعون رأيهم

எனக்கு தெரிந்த இதைவிட சிறந்த கடிதம் எதுவுமில்லை. ஏனென்றால், நபித்தோழர்களும் மற்றும் தாபியீன்களும் தங்களுது சொந்த யூகங்ளைப் புறந்தள்ளிவிட்டு குர்ஆனைத் தொடுவதற்கு சுத்தம் அவசியம் என்ற நிலைப் பாட்டிலேயே இருந்தனர்.
நூல்: திப்யான் ஃபீ அக்ஸாமில் குர்ஆன்- பக்கம்:144

இமாம் ஹாகிம் அவர்களின் கூற்று:-

قال الحاكم : قد شهد عمر بن عبد العزيز والزهري لهذا الكتاب بالصحة

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் ஆதாரபூர்வமானது என்று உமர் இப்னு அப்தில் அஜிஸ் அவர்களும் ஜூஹ்ரீ அவர்களும் சாட்சி பகர்ந்துள்ளனர்.
நூல்: ஹாகிம்: 1-397

இமாம் இப்னு அப்திர் பர்ர் அவர்களின் கூற்று:-

قال الامام ابن عبد البر : وكتاب عمروبن حزم هذا تلقاه العلماء بالقبول والعمل وهم عندهم اشهر واظهر من الاسناد الواحد المتصل

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அம்ரு இப்னு ஹஜ்ம் அவர்களுக்கு இக்கடிதத்தை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏற்று அமல்படுத்தியுள்ளார்கள்.மேலும்,தொடர் வரிசையுள்ள ஒரு வழித் தொடர் ஹதீஃத்தைவிட கடிதம் சம்பந்தப்பட்ட இந்த ஹதீஃத் பிரபல்யமடைந்ததாகவும் மிகவும் ஏற்கத்தக்கதாகவும் அவ்வ்றிஞர்களிடம் கருதப்பட்டது.
நூல்: இஸ்திஃத்கார் 8-10

சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட இப்னு தைமியாவின் கூற்று:-

قال ابن تيمية : وهم كتاب مشهور عند اهل العلم.

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் பிரபல்யமுள்ளதாகும்.
நூல்: ஷரஹுல் உம்தா 1-38

பதில்
ஷேக் அப்துல்லா ஜமாலி அந்தக் கட்டுரையில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கூறியுள்ளதற்கு நாம் எந்த மதிப்பும் அளிக்கத் தேவை இல்லை. அவர்கள் அப்படி சொல்லி இருந்தாலும் சொல்லாமல் போனாலும் மார்க்கத்தில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

அல்லாஹ்வும் அவனது தூதரும் என்ன சொன்னார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியதாகும். எனவே  அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட குரான் வசனத்துக்கும் ஹதீஸ்கள் பற்றிய விளக்கத்தை தருகிறோம்..

நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையில் உளூவின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்ற கருத்துக்கு ஒரு குர்ஆன் வசனத்தையும் நான்கு அறிவிப்புகளையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.

56 : 79 ஆவது வசனத்தைப் பொறுத்தவரை அதற்கான சரியான விளக்கத்தை இதற்கு முன்பே நமது இணையதளத்தில் பதிவுசெய்துள்ளோம். கீழ்க்கண்ட லிங்கை பார்க்கவும்.


உளூவின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்கு அவர்கள் காட்டும் நான்கு அறிவிப்புகளும் பலவீனமானதாகும்.

முதல் அறிவிப்பு

المستدرك على الصحيحين للحاكم  - كتاب معرفة الصحابة رضي الله عنهم

 ذكر مناقب حكيم بن حزام القرشي رضي الله عنه - حديث : ‏6055

 أخبرنا أحمد بن سليمان بن الحسن الفقيه ببغداد ، ثنا جعفر بن أبي عثمان الطيالسي ، ثنا إسماعيل بن إبراهيم ، قال : سمعت أبي يحدث ، عن سويد بن أبي حاتم ، صاحب الطعام ، ثنا مطر الوراق ، عن حسان بن بلال ، عن حكيم بن حزام ، أن النبي صلى الله عليه وسلم لما بعثه واليا إلى اليمن قال : " لا تمس القرآن إلا وأنت طاهر " " هذا حديث صحيح الإسناد ، ولم يخرجاه " *

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பியபோது நீ தூய்மையான நிலையில் இருக்கும் போதே தவிர குர்ஆனைத் தொடதே என்று கூறினார்கள்.  நூல் : ஹாகிம்

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று ஹாகிம் கூறிவிட்டதால் இது ஆதாரப்பூர்வமானது என்று மேற்படி கட்டுரையாளர் கூறுகிறார். இதில் இருந்து இவரது அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு ஹதீஸ் நம்பகமானது என்பதற்கும் அதைப் பதிவு செய்தவர் கொடுக்கும் நற்சாண்ரு போதுமானதாகாது. அதில் உள்ள ஒவ்வொரு அறிவிப்பாளர் குறித்தும் ஆய்வு செய்து அவர்கள் நம்பகாமானவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டால் தான் அது சரியான ஹதீஸாகும். இது பொதுவான விதியாகும்.

இது அல்லாமல் ஹாகிம் அவர்கள் நம்பகமான ஹதீஸ் என்று முடிவு செய்வதில் அலட்சியப் போக்கு உடயவர் எனப் பெயரெடுத்தவர். ஹாகிம் ஒரு ஹதீஸை நம்பகாமானது எனக் கூறினால் கூடுதல் கவனத்துடன் அந்த ஹதீஸை ஆராய வேண்டும்.

ஹதீஸ் கலையின் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் மேற்படி கட்டுரையாளர் வாதிடுகிறார்.

மேலும் ஹாகிம் சொன்னதை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டுகிறார் எனவும் இவர் வாதம் செய்கிறார். இதுவும் அவரது அறியாமையைக் காட்டுகிறது. ஒருவரது கூற்றை எடுத்துக் காட்டுவதால் அதை ஆதரிக்கிறார் என்ற கருத்தை தராது. இதிலும்  மேற்படி கட்டுரையாளர் ஜமாலி என்பவர் தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

ميزان الاعتدال - الذهبي (2/ 247)

[ سويد ] 3619 - سويد بن إبراهيم البصري العطار، أبو حاتم صاحب الطعام. عن الحسن وقتادة. قال عثمان، عن ابن معين: أرجو ألا يكون به بأس.وروى أبو يعلى عن ابن معين: ليس به بأس.وقال النسائي: ضعيف.وقال أبو زرعة: ليس بالقوى، حديثه حديث أهل الصدق.وقال البخاري: قال يحيى القطان /: قالوا: إن سويدا [ 160 / 2 ] أبا حاتم سمع من أبى المليح، وهو سويد بن إبراهيم الحناط (2)، أراه العطار.ويقال الهذلى.سمع منه صفوان بن عيسى، وموسى بن إسماعيل.وساق ابن عدى في ترجمته أربعة عشر حديثا، ثم قال: بعضها لا يتابعه عليها أحد، وهو إلى الضعف أقرب.وقال ابن حبان - فأسرف: يروى الموضوعات عن الاثبات، وهو صاحب حديث البرغوث.وروى قتادة، عن أنس: أن رسول الله صلى الله عليه وسلم سمع رجلا سب برغوثا فقال: لا تسبه، فإنه نبه نبيا من الانبياء لصلاة الصبح.حدثناه الحسن بن سفيان، حدثنا النضر بن طاهر، سمعت سويدا أبا حاتم فذكره.قلت: رواه طالوت بن عبادة عنه.وقال ابن أبى حاتم - في العلل: سألت أبى عن حديث سويد بن أبى حاتم، عن سليمان التميمي، عن أبى عثمان أن أبا هريرة قال: من قرأ يس مرة فكأنما قرأ القرآن عشر مرار - فقال: هذا حديث منكر.

இந்த ஹதீஸை சுவைத் பின் அபீ ஹாதிம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவராவார். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ, இமாம் அபூ சுர்ஆ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் மோசமான மனனத்தன்மை கொண்டவர். பல தவறுகள் இவரிடம் ஏற்பட்டுள்ளன என்று இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் இமாம் நவவீ அவர்கள் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று அல்குலாஸா என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் ஹாகிம் ஹதீஸை நம்பகமானது என்று முடிவு செய்வதில் அலட்சியப்போக்குள்ளவர். பலவீனமான பல செய்திகளை அவர் தவறுதலாக நம்பகமானவை என்று கூறிவிடுவார்.

மேற்கண்ட அறிஞர்களின் கூற்றுக்களைக் கவனிக்கையில் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று தெளிவாகத் தெரிகின்றது. எனவே இதற்கு மாற்றமாக இமாம் ஹாகிம் அவர்கள் கூறியதை ஏற்க முடியாது. ஹாகிம் கூறியதை சரிகண்ட இமாம் தஹபீ அவர்களின் கூற்றையும் ஏற்க முடியாது.

இரண்டாவது அறிவிப்பு

المعجم الصغير للطبراني  - من اسمه يحيى

 حديث : ‏1159‏

 حدثنا يحيى بن عبد الله أبو زكريا الدينوري ، بالبصرة , حدثنا سعيد بن محمد بن ثواب الحصري ، حدثنا أبو عاصم ، حدثنا ابن جريج ، عن سليمان بن موسى ، سمعت سالم بن عبد الله بن عمر يحدث , عن أبيه ، قال : قال رسول الله صلى الله عليه وآله وسلم : " لا يمس القرآن إلا طاهر " لم يروه عن سليمان بن موسى إلا ابن جريج , ولا عنه إلا أبو عاصم ، تفرد به سعيد بن محمد *

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
தூய்மையானவரைத் தவிர குர்ஆனை தொடக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் : தப்ரானி

இந்தச் செய்தியில் சயீத் பின் முஹம்மத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. மேலும் இந்த அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் என்வரும் இடம்பெற்றுள்ளார்.

இவர் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு வேலையை செய்யக்கூடியவர். இவரைப் போன்றவர்கள் நான் கேட்டேன். எனக்கு அறிவித்தார் என்று நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தக்கூடிய வாசகத்தை கூறினாலே இவர்களின் அறிவிப்பு ஏற்கப்படும். இல்லையென்றால் ஏற்கப்படாது. மேற்கண்ட அறிவிப்பில் சுலைமான் பின் மூசா என்வரிடம் இவர் நேரடியாக கேட்டதாக எந்த வாசகத்தையும் குறிப்பிடவில்லை. இதன் காரணத்தாலும் இது பலவீனமான செய்தியாகும்.

இமாம் ஹைஸமீ அவர்கள் இந்த அறிவிப்பில் உள்ள அனைவரும் நம்பகமானவர்கள் என்று கூறியதாக ஜமாலி வாதிடுகின்றார். ஆனால் இமாம் ஹைஸமீ இவர்கள் கூறுவது போல் சொல்லவில்லை. மாறாக இதில் உள்ள அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் என்றே கூறியுள்ளார்.

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத நபர்களை நம்பகமானவர் என்று கூறும் வழமையுடையவர். இந்த அடிப்படையில் இப்னு ஹிப்பான் ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று கூறி இருந்தால் அந்த நபரைப் பற்றி இமாம் ஹைஸமீ அவர்கள் நம்பகமானவர் என்று சொல்லப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுவார். இப்னு ஹிப்பானிடத்தில் இவர் நம்பகமானவர் என்பது இதன் பொருளாகும். ஹைஸமீ அவர்களின் இந்தச் சொல் வழக்கையும் கட்டுரையாளர் அறியாததால் ஹைஸமீ நம்பகமானவர் எனக் கூறியதாக வாதிடுகிறார்

மூன்றாவது அறிவிப்பு

المعجم الكبير للطبراني  - باب من اسمه عمر
 ما أسند عثمان بن أبي العاص -  المغيرة بن شعبة
 حديث : ‏8212‏

 حدثنا أحمد بن عمرو الخلال المكي ، ثنا يعقوب بن حميد ، ثنا هشام بن سليمان ، عن إسماعيل بن رافع ، عن محمد بن سعيد بن عبد الملك ، عن المغيرة بن شعبة ، قال : قال عثمان بن أبي العاص - وكان شابا - : وفدنا على النبي صلى الله عليه وسلم فوجدني أفضلهم أخذا للقرآن ، وقد فضلتهم بسورة البقرة ، فقال النبي صلى الله عليه وسلم : " قد أمرتك على أصحابك ، وأنت أصغرهم ، فإذا أممت قوما فأمهم بأضعفهم ، فإن وراءك الكبير والصغير والضعيف وذا الحاجة ، وإذا كنت مصدقا فلا تأخذ الشافع - وهي الماخض - ولا الربى ولا فحل الغنم ، وحزرة الرجل هو أحق بها منك ، ولا تمس القرآن إلا وأنت طاهر ، واعلم أن العمرة هي الحج الأصغر ، وأن عمرة خير من الدنيا وما فيها ، وحجة خير من عمرة " *

உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நீ தூய்மையான நிலையில் இருந்தாலே தவிர குர்ஆனைத் தொட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : தப்ரானி

இந்தச் செய்தியில் இஸ்மாயீல் பின் ராஃபிஉ என்பவர் இடம்பெற்றுள்ளார். இமாம் இப்னு ஹஜர், இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் நஸாயீ, இமாம் தஹபீ, இமாம் அஹ்மது பின் ஹம்பள், இமாம் யஃகூப் பின் சுப்யான், இமாம் இப்னு அதீ, இமாம் தாரகுத்னீ, இமாம் இப்னு கராஷ், இமாம் அபூ ஹாதிம் மற்றும் முஹம்மது பின் சஅத் ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இமாம் புகாரி மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இமாம் புகாரி அல்லாத மற்ற ஏராளமான அறிஞர்கள் ஒன்றுபட்டு இவரை பலவீனமானவர் என்று கூறுவதாலும் இவர் மனனத்தன்மை சரியில்லாதவர் என்று குறைக்கான காரணம் தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாலும் இவர் பலவீனமானவர் என்றே நியாய உணர்வு உள்ளவர்கள் கருதுவார்கள். இவரிடத்தில் உள்ள குறையை இமாம் புகாரி அவர்கள் அறியாத காரணத்தால் தவறுதலாக நம்பகமானவர் என்று கூறியுள்ளார். எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.

நான்காவது அறிவிப்பு

مراسيل أبي داود  - جامع الصلاة
 حديث : ‏90‏  

 حدثنا القعنبي ، عن مالك ، عن عبد الله بن أبي بكر بن محمد بن عمرو بن حزم ، " أن الكتاب الذي ، كتبه رسول الله صلى الله عليه وسلم لعمرو بن حزم أن " لا يمس القرآن إلا طاهر " حدثنا محمد بن يحيى ، حدثنا أبو اليمان ، أخبرنا شعيب ، عن الزهري ، قال : قرأت صحيفة عند آل أبي بكر بن محمد بن عمرو بن حزم ذكر أن رسول الله صلى الله عليه وسلم كتبها لعمرو بن حزم ، حين أمره على نجران ، وساق الحديث فيه : " الحج الأصغر العمرة ، ولا يمس القرآن إلا طاهر " قال : أبو داود : روي هذا الحديث ، مسندا ولا يصح *

அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மது பின் அம்ர் பின் ஹஸ்ம் கூறுகிறார் :  தூய்மையானவரைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இருந்தது.  நூல் : மராசீலு அபீ தாவுத் (90)

இந்த செய்தி முழுமையான அறிவிப்பாளர் தொடரின்றி உள்ளது. இதை ஆதாரமாக காட்டக்கூடியவர்கள் இதில் உள்ள அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு தொடர்பாக இமாம் தாரகுத்னீ கூறிய வாசகத்தில் தங்களுக்குச் சாதாகமானதை மட்டும் கூறிவிட்டு எதிரானதை வசதியாக வெட்டியுள்ளனர்.

இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்தச் செய்தி தொடர்பாக கூறுகையில் இது தொடர்பு அறுந்த முர்சல் என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதில் உள்ள அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி முர்சல் என்று இமாம் தாரகுத்னீ கூறியை திட்டமிட்டு மறைத்துள்ளனர்.

تنقيح التحقيق لابن عبد الهادي (1 / 231):

قال الدَّارَقُطْنيُ: هو مرسلٌ، ورواته ثقات (1)

இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழரில்லை. நபித்தோழர் காலத்தில் வாழ்நதவருமில்லை. இப்படிப்பட்டவர் நபியுடன் தொடர்புடைய செய்தியை அறிவிப்பதால் இது முர்சல் (தொடர்பு அறுந்த செய்தி) ஆகும் என்று தாரகுத்னீ தெளிவுபடுத்தியுள்ளார். இமாம் அபூதாவுத் அவர்களும் இந்த செய்தியை தொடர்பு அறுந்த முர்சலான செய்திகளில் ஒன்றாக பதிவு செய்துள்ளார். மேலும் இதே செய்தி முழுமையான அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொடர் சரியானதல்ல என்பதையும் மேலே இமாம் அபூதாவூத் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இமாம் அபூதாவுத் அவர்கள் மராசீலு அபீதாவுத் என்ற நூலின் வேறொரு இடத்தில் முறிவில்லாமல் வரும் அறிவிப்பாளர் தொடர் எதன் காரணத்தால் பலவீனமாக உள்ளது என்ற விபரத்தை கூறுகிறார்.

مراسيل أبي داود  - باب كم الدية
 حديث : ‏238‏ 

قال أبو داود : أسند هذا ولا يصح . رواه يحيى بن حمزة ، عن سليمان بن أرقم ، عن الزهري ، عن أبي بكر بن محمد بن عمرو بن حزم ، عن أبيه ، عن جده . حدثنا أبو هبيرة قال : قرأته في أصل يحيى بن حمزة ، حدثني سليمان بن أرقم ، وحدثنا هارون بن محمد بن بكار ، حدثني أبي ، وعمي ، قالا : يحيى بن حمزة ، عن سليمان بن أرقم ، مثله قال أبو داود : والذي قال : سليمان بن داود وهم فيه . حدثنا الحكم بن موسى ، حدثنا يحيى بن حمزة ، عن سليمان بن داود الخولاني ، - ثقة - عن الزهري ، عن أبي بكر بن محمد بن عمرو بن حزم ، عن أبيه ، عن جده ، وهم فيه الحكم *

முறிவில்லாமல் வரும் அறிவிப்பாளர் தொடரில் சுலைமான் பின் அர்கம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று அறிஞர் பெருமக்களால் ஒதுக்கப்பட்டவர்.

தங்களுடைய கருத்துக்கு இவர்கள் ஆதாரமாக சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனம் இவர்கள் சொல்லும் அர்தத்தைத் தரவில்லை. அடுத்து இவர்கள் ஆதாரமாக கூறிய மேற்கண்ட நான்கு அறிவிப்புகளும் தெளிவான பலவீனமான செய்திகளாகும்.

எனவே உளூவின்றி குர்ஆனைத் தொடக்கூடாது என்ற கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

---- http://www.onlinepj.com -----

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இது குறித்து வெளியிடப்பட்ட வீடியோக்களைக் காண்க

வீடியோ1-        வீடியோ2       விடியோ 3    விடியோ 4
 ------------------------------------------------------------------------------------------------------------------------

இது சம்பந்தமான இன்னும் சில பதிவுகள்  ;-
சுத்தமானவர்களே அண்றி குர்ஆனை தொடமாட்டார்கள் http://silaiyumkaburum.blogspot.com/2015/01/letter-to-yemen.html

திருக்குர்ஆனை தொடலாமா  ;- http://silaiyumkaburum.blogspot.com/2015/01/vulu-illamal-kuranai-thodalaama.html